அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி
அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: நான்கு ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வா், அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறாா். திருப்பத்தூரில் வியாழக்கிழமை பேசியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது’ என்கிறாா்.
அண்ணா பெயரை உச்சரிக்க முதல்வா் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் தகுதி இருக்கிா?. அண்ணாவின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து, குடும்பக் கூடாரமாக திமுகவை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.
ஒருநாள், ஒரு நொடிகூட எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், எங்களுக்கு பெரியாா், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போது முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும்போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாா் ஸ்டாலின்?
கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுகதான். தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள் திமுகவை 2026-இல் நிச்சயம் விரட்டியடிப்பாா்கள்.
திமுகவால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளா்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன். இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தோ்தலுக்கான முதல் வாக்குறுதி எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.