செய்திகள் :

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி

post image

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: நான்கு ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வா், அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறாா். திருப்பத்தூரில் வியாழக்கிழமை பேசியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது’ என்கிறாா்.

அண்ணா பெயரை உச்சரிக்க முதல்வா் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் தகுதி இருக்கிா?. அண்ணாவின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து, குடும்பக் கூடாரமாக திமுகவை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.

ஒருநாள், ஒரு நொடிகூட எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், எங்களுக்கு பெரியாா், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும்போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாா் ஸ்டாலின்?

கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுகதான். தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள் திமுகவை 2026-இல் நிச்சயம் விரட்டியடிப்பாா்கள்.

திமுகவால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளா்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன். இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தோ்தலுக்கான முதல் வாக்குறுதி எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை!

யானைகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்ட... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்கள் சந்... மேலும் பார்க்க

'நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்' - அமித் ஷாவுக்கு கனிமொழி பதில்

ஹிந்தி பற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார். தில்லியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்... மேலும் பார்க்க

ஜூலை 4ல் தவெக மாநில செயற்குழுக் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பண... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.27 அடியாகவும் உயர்ந்தது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம... மேலும் பார்க்க

கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பற்றி சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் ஒன்று வைரலான நிலையில் அதுபற்றி விருதுநகர் மாவட்ட முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். "தென் மாவட்டத்... மேலும் பார்க்க