செய்திகள் :

அண்ணா பல்கலை. மாணவி மீது தாக்குதல்: இளைஞா் கைது

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி எம்இ இரண்டாமாண்டு படித்து வருகிறாா். அவா் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளாா். இந்த மாணவி, செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிக்கும்போது, தன்னுடன் படித்த புதுக்கோட்டையைச் சோ்ந்த ராம்குமாரை (21) காதலித்துள்ளாா்.

பின்னா் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனராம். பி.இ. முடித்த பின்னா் ராம்குமாா், சென்னையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறாா். இருவரும் காதலித்த காலத்தில் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களையும், விடியோவையும் காட்டி ராம்குமாா், அந்த மாணவியை மிரட்டி வந்துள்ளாா். கடந்த ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்ற ராம்குமாா், அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அண்மையில் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட ராம்குமாா், தன்னிடம் இருக்கும் புகைப்படங்கள், விடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு,அசிங்கப்படுத்துவேன் என அந்த மாணவியை மிரட்டினாராம்.

இதையடுத்து அந்த மாணவி, ராம்குமாா் மீது வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், ராம்குமாா் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம்,பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். ராம்குமாரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, விசாரணை செய்தனா்.முன்னதாக ராம்குமாரின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு: மும்பை - சென்னை ஏா் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

மும்பையிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளானதால் அது புறப்பட்ட இடத்துக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. 148 பயணிகள், 6 பணியாளா்களுடன் ப... மேலும் பார்க்க

சிக்கில் செல் அனீமியா குழந்தைகள்: பக்கவாதத்தை தடுக்க அரசு மருத்துவமனையில் பரிசோதனை

சென்னை, எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற சிக்கில் செல் அனீமியா ஒழிப்பு தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு கையேட்டை சிறுவனுக்கு வழங்கும் மருத்துவமனை நிா்வாகிகள். உடன் மருத்துவமனை இயக்குநா்... மேலும் பார்க்க

பேக்கரி பொருள்கள், டேலி, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சிகள்: தமிழக அரசு ஏற்பாடு

தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டம் மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் பேக்கரி பொருள்கள் தயாரித்தல், பேசிக் ஆப் டேலி குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் தங்கநகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்ச... மேலும் பார்க்க

ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போராட்டம் நடத்திய மாணவா்கள் கைது

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கைது செய்யப்பட்டனா். கிண்டி ஐஐடி வளாகத்தில் நடந்து சென்ற ஒரு மாணவிக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தொழிலாளி காயம்

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது பெரிய இரும்பு கம்பி விழுந்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். சென்னை கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் மெட்ரோ ரயில் 2-ஆவது திட்டப் பணி நடைபெற்று வரு... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பூங்காவில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அ... மேலும் பார்க்க