செய்திகள் :

அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் கணிப்பு கூறுவதென்ன?!

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருப்பது போலவும் கார்ட்டூன் விடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருபுறம் உலக நாடுகளுடன் வர்த்தக போர், மற்றொருபுறம் உக்ரைன் - ரஷிய போரை முடிவுக்கு கொண்டும் வரும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டிரம்ப் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற செய்தி உண்மையா? பொய்யா?.. இது நிஜத்தில் நடந்துவிடுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் மிக பிரபலமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடர் நிஜ வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைக் கணிப்பதில் புகழ்பெற்றது. இந்தக் கணிப்புகள் ஒருபுறமிருக்க வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி அதிபர் டிரம்ப் இறந்துவிடுவார் என்று அந்த கார்டூனில் காட்டப்பட்டிருப்பதாக விடியோ கிளிப் ஒன்றில் இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

அந்த விடியோவில் மரணமடைந்த அதிபர் டிரம்ப்பின் உடல், சவப்பெட்டியில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பது போலவும், அவரைச் சுற்றி அரசியல் பிரமுகர்கள் சூழ்ந்திருப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சர்ச்சைக்குரிய விடியோ பற்றி சிம்ப்ஸன்ஸ் நிர்வாகத் தலைமை இயக்குநர் மேட் செல்மேன் கூறுகையில், “இந்த விடியோ உண்மையானது கிடையாது. இது இணையவாசிகளால் புனையப்பட்ட விடியோ. 2017 ஆம் ஆண்டிலிருந்தே இதேபோன்று பல்வேறு சர்ச்சையான விடியோக்கள் புனையப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.

டிரம்ப் குறித்து இதுபோன்று விடியோக்கள் பரப்பப்படுவது இது முதல்முறை கிடையாது. கடந்தாண்டு தேர்தல் பிரசாரத்தின் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போதும், ‘ஆழந்த இரங்கல் டிரம்ப் 1946 - 2024’ என்ற வாசகத்துடன் அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் விடியோக்கள் வைரலாகின. என்னதான் தவறான தகவல்களைப் பரப்பினாலும், தி சிம்ப்ஸன்ஸ் கார்ட்டூன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக எபோலா வைரஸ் தொற்று, டொனால்ட் டிரம்ப் கைது, கமலா ஹாரிஸ் அமெரிக்க வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவது, ஃபிபா விளையாட்டு ஊழல், விர்ச்சுவல் ரியாலிட்டி கண்டுபிடிப்பு, வங்கதேசத்தின் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் உள்ளிட்டவைகளையும் முன்பே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க