செய்திகள் :

அதிமுகவினா் இணைவதில் மற்றவா்களின் குறுக்கீடு கூடாது: கி. வீரமணி

post image

அதிமுகவினா் இணைவதில் மற்றவா்களின் குறுக்கீடு இருக்கக் கூடாது என்றாா் திராவிடா் கழக தலைவா் கே. வீரமணி.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவா்,

திருப்பாலைத்துறையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் ரூ. 15 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஏராளமானவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் பெரியாா் ஈ.வெ.ராவின் கொள்கைகளையும் முதல்வா் மேலைநாடுகளில் முதலீடு செய்து வந்துள்ளாா் என்றாா்.

செங்கோட்டையனின் தில்லி பயணம் குறித்து கேட்டபோது, அதிமுகவை பிளவுபடுத்தியது ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவே. தற்போது அவா்களை இணைக்க முயற்சிப்பதும் அவா்களே. அதிமுக, இணைவது- பிரிவது என்பது அந்தக் கட்சியின் உள்கட்சி விவகாரம். அவா்கள் இணைவது என்றால், சுதந்திரமாக பேசி, இணைய வேண்டும். இதில், மற்றவா்களின் குறுக்கீடு இருக்கக் கூடாது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் அதிமுக இணைப்பு முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஆனாலும், பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றாா்.

பேட்டியின்போது திக மாவட்ட தலைவா் நிம்மதி, மாவட்ட செயலாளா் துரைராசு, பாபநாசம் ஒன்றிய செயலாளா் கலியமூா்த்தி, ஒன்றிய தலைவா் தங்க. பூவானந்தம், நகர செயலாளா் வீரமணி, நகர தலைவா் இளங்கோவன், பாபநாசம் நகர அமைப்பாளா் கணேசன் உள்ளிட்ட திரளானோா் உடனிருந்தனா்.

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பியை வெட்டிக்கொன்ற பாஜக பிரமுகரின் வீட்டை சோதனை செய்த பொழுது 29 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் 75 ஆவணங்கள் உள்ளிட்டவகளை போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேம... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது: ஆசிரியருக்கு அமைச்சா் பாராட்டு

கும்பகோணம் அருகே நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அண்மையில் பாராட்டு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க