செய்திகள் :

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்...! - ஓபிஎஸ் பேட்டி

post image

அதிமுக தலைவர்கள் கட்சியை ஒன்றிணைக்கவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து செய்வார்கள் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.

"அண்ணாவின் தாரக மந்திரங்களை வைத்துதான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஆட்சி நடத்தினார்கள். அவர்களது கனவு நிறைவேற வேண்டும் என்றால், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கின்ற அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் நடக்கும் என மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொண்டர்களின் உணர்வுகளையும் தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து நடந்து அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இன்று ஊறு ஏற்பட்டுள்ளது. அவர்களின் கனவுகள் நனவாக்கும் நிலையில் இன்று சட்ட விதிகள் இல்லை. சாதாரண தொண்டன், அதிமுகவில் பொதுச் செயலராக வரலாம் என்ற விதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்.

அண்ணாவுக்கு ஓபிஎஸ் மரியாதை

தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து அதிமுகவை காப்பாற்றுவார்கள்.

செங்கோட்டையனுடன் தொடர்ந்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். சசிகலா, செங்கோட்டையன் ஆகியோருடன் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடனும் போனில் பேசினேன். சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார். நேரம் ஒத்துவந்தால் சந்திப்போம்" என்று பேசினார்.

மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு 'அரசியலில் எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.

Former CM O Panneerselvam says that AIADMK forces should unite

வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை - முதல்வர் வரவேற்பு

வக்ஃபு சட்டத் திருத்தம் தொடர்பான, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது: வழக்குரைஞர் பாலு

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று அன்புமணி வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்... மேலும் பார்க்க

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். ... மேலும் பார்க்க

விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்: சி. விஜயபாஸ்கர்

எம்ஜிஆர் ஒரு மகத்தான தலைவர், அவரை யாருடன் ஒப்பிட வேண்டாம் என்று விஜய் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை அண்ணா சிலைக்கு மா... மேலும் பார்க்க

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம்: டிடிவி தினகரன்

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேரு... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 15) தொடக்கி வைத்தார்.தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இ... மேலும் பார்க்க