செய்திகள் :

அதிமுக அமித்ஷாவின் அடிமையாகிவிட்டது: அமைச்சர் சேகர்பாபு

post image

அதிமுக அமித்ஷாவின் அடிமையாகிவிட்டது என தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, கரூர் முப்பெரும் விழா அரசியல் களத்தில் திமுகவை விமர்சித்தவர்களும் வாழ்த்தும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பா, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

சென்னை மாநகராட்சி மண்டலம்-5க்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம்,

வால்டாக்ஸ் சாலையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகள், மற்றும் ஏழுகிணறு, குலோப் திருமண மணடபம் அருகில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதல்வரின் எண்ணங்களுக்கு வண்ணமளிக்கும் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை ஆய்வு கொண்டதாகவும், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு 700 பேர் அமறும் வகையில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் நவம்பர் மாதம் தொடங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒவ்வொரு முறை தில்லி பயணம் குறித்து வெளிப்படை தன்மை இல்லாமல் செல்கிறார் என்றும் அதிமுகவை அமித்ஷாவின் அடிமையாக்கிவிட்டார் என பதிலளித்தார்.

மேலும், கரூர் முப்பெரும் விழா அரசியல் களத்தில் திமுகவை விமர்சித்தவர்களும் வாழ்த்தும் வகையில் அமைந்ததாக கூறினார்.

முகத்தை துடைத்தேன்; மறைக்கவில்லை! - முகமூடி சர்ச்சை பற்றி இபிஎஸ் விளக்கம்

Stating that the ADMK has become a slave to Amit Shah, Minister Sekarbabu said that the Karur Muperum festival is a celebration that even those who criticized the DMK in the political arena can congratulate.

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை என பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.சென்னையில் தியாகராய நகர் ஹோட்டல் ரெசிடென்சியில் வியாழக்கி... மேலும் பார்க்க

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா: பிகாரில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு பயனளிக்கும் விதமாக மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்தார்.இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் த... மேலும் பார்க்க

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

நெல்லையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியமாக இருசக்கர வாகன ஓட்டியுடன் வாக்குவாதம் செய்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினர்கள் வியாழக்கிழமை குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.புதுவை சட்டப் பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வியாழக்கிழம... மேலும் பார்க்க

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை சைதாப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகி... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே சற்று ஏற்ற, இறக்கமாக ... மேலும் பார்க்க