செய்திகள் :

அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!

post image

அதீத உணவுகளை சாப்பிட்டு அதனை டிக்டாக் விடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உடல் பருமனால் மரணமடைந்துள்ளார்.

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் எஃபெகான் குல்தூர் (வயது 24), இவர் டிக்டாக் செயலியில் அதீத உணவுகள் சாப்பிட்டு அதனை விடியோவாக (முக்பங் விடியோ) வெளியிட்டு டிக்டாக் பயணாளர்களிடையே மிகவும் பிரபலமானார். குல்தூரின் முக்பங் விடியோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி அவரது டிக்டாக் கணக்கில் 1,56,000 பேரும் இன்ஸ்டாகிராமில் 12,000 பேரும் அவரை பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தினால் தொடர்ந்து உடல் பருமனடைந்த அவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். மேலும், சுவாசக் கோளாறினால் அவதிப்பட்ட அவர் கடந்த சில காலமாக படுத்த படுக்கையாக ஆனார்.

இதையும் படிக்க:அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!

இதனைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சையளிக்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், கடந்த மார்ச்.7 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது நண்பரும் மற்றொரு டிக்டாக் பிரபலமுமான யாசின் ஒயானிக் தெரிவித்துள்ளார்.

தனது இறுதி விடியோவை அவர் கடந்த 2024 அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்த நிலையில் அதில் தான் உணவு கட்டுப்பாட்டில் (டையட்டில்) இருப்பதாகக் கூறியிருந்தார்.

முன்னதாக, தென் கொரியா நாட்டிலிருந்து துவங்கிய அதீத உணவு சாப்பிட்டு பதிவு செய்யப்படும் பிரபல முக்பங் விடியோக்கள் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!

புது தில்லியின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் போதைப் பொர... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை அழிக்கப்பட வேண்டும்: சிவசேனை எம்.பி.

மகாராஷ்டிரத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறை அழிக்கப்பட வேண்டும் என சிவசேனை எம்.பி. மக்களவையில் பேசியுள்ளார். மக்களவையில் இன்று (மார்ச் 12) பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய சிவசேனை கட்சியின் ... மேலும் பார்க்க

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

படைகளைச் சந்திக்க எஸ்தோனியா செல்கிறார் இளவரசர் வில்லியம்!

உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு படைகளைச் சந்திக்க முதல்முறையாக அந்நாட்டுக்கு முடி இளவரசர் வில்லியம் பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு... மேலும் பார்க்க

முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்களை ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்... மேலும் பார்க்க

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பல... மேலும் பார்க்க