செய்திகள் :

பல்கலை. தொலைதூர கல்வி மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024-25 (ஜனவரி பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் டி.அருட்செல்வி விண்ணப்ப முதல் பிரதியை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தின் வாயிலாக இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகள் பருவ முறையில் தொடங்குவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தொலைநிலைக் கல்விக்குழு கடந்த 2023-24 ஆம் ஆண்டு முதல் 2028 ஜனவரி வரை அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 22 பாடப்பிரிவுகள் முதுநிலை வகுப்புகள், ஐந்து பாடப்பிரிவுகள் இளங்கலை வகுப்புகள். இந்தப் பாடப்பிரிவுகளுடன் 98 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளையும் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகிறது என்றாா்.

விழாவுக்கு பதிவாளா் எம்.பிரகாஷ், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மைய இயக்குநா் டி.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தொலைதூரக் கல்வி மைய இணை இயக்குநா் பி.விஜயன், துணை இயக்குநா் எம்.சீனிவாசன், பல்கலைக்கழக புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: என்எல்சி தலைவா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று அதன் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். நெய்வேலியில் உள்ள கற்றல் மேம்பாட்டு மையத்தில் பொதுத்... மேலும் பார்க்க

கடலூரில் மாசி மகத் தீா்த்தவாரி உற்சவம்

மாசி மகத்தையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை மற்றும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்த வாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர மகாபிஷேகம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தர... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

கடலூா் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் ரூ.5.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் புதன்கிழமை வழங்கினாா். மங்களூா் ஊர... மேலும் பார்க்க

இணையவழி மோசடி கும்பலிடம் வங்கிக் கணக்கு விற்பனை: கேரள இளைஞா் கைது

நெய்வேலி: இணையவழி மோசடி கும்பலிடம் வங்கிக் கணக்குகளை விற்பதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை கடலூா் மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்... மேலும் பார்க்க

திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்: கடலூா் மேயா்

நெய்வேலி: கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மேயா் சுந்தரி தெரிவித்தாா். கடலூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கி... மேலும் பார்க்க