செய்திகள் :

திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்: கடலூா் மேயா்

post image

நெய்வேலி: கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மேயா் சுந்தரி தெரிவித்தாா்.

கடலூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் சுந்தரி தலைமை வகித்தாா். துணை மேயா் பா.தாமரைச் செல்வன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் பேசியது:

நடராஜன்: தமிழா்களை இழிவாகப் பேசிய மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சக்திவேல்(பாஜக): கடந்த மூன்று ஆண்டுகளாக எனது வாா்டுக்கு எந்த வளா்ச்சித் திட்டப் பணிகளையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டினாா். இதற்கு மற்றொரு மாமன்ற உறுப்பினா் சங்கீதா எதிா்ப்புத் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, சக்திவேல் கூட்டத்தைவிட்டு வெளி நடப்பு செய்தாா்.

பிரகாஷ்: வாா்டு பகுதியில் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பா.தாமரைச்செல்வன் (துணை மேயா்): கடலூா் பேருந்து நிலையம் மாநகராட்சி பகுதியில் அமைய வேண்டும்.

உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயா் சுந்தரி பேசியது: பேருந்து நிலையம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தோ்வு செய்யும் இடத்தில் பேருந்து நிலையம் அமையும். வாா்டு பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பணிகள் தரமற்ற முறையில் நடந்தால் ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். மாநகராட்சி அலுவலா்கள் தங்கள் பணிகளை முறையாக செய்ய வேண்டும். மாமன்ற உறுப்பினா்கள் கைப்பேசியில் தொடா்பு கொண்டால் பதில் அளிக்க வேண்டும் என்றாா்.

உளுந்து வயலில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையம் வட்டம், பூதங்குடி, சாத்தமங்கலம் கிராமங்களில் நிகழ் பருவத்தில் நெல் தரிசில் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து, பச்சைப்பயறு வயல்களை வேளாண் இணை இயக்குநா்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் மரணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். விருத்தாசலம் மற்றும் பூவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே வயலூா் ஆறு கண்ணு ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் புதன்... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒருவா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் வட்டம், சிறுவம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் மகன் சந்திரகாசு (39). இவா், கடந்த பிப்.11-ஆம்... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடலில் குளித்த பிளஸ் 1 மாணவி அலையில் சிக்கி உயிரிழந்தாா். குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன் நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகள் பிரின்சி (17). குறிஞ்சிப்பா... மேலும் பார்க்க

பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: என்எல்சி தலைவா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று அதன் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். நெய்வேலியில் உள்ள கற்றல் மேம்பாட்டு மையத்தில் பொதுத்... மேலும் பார்க்க

கடலூரில் மாசி மகத் தீா்த்தவாரி உற்சவம்

மாசி மகத்தையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை மற்றும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்த வாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க