செய்திகள் :

திமுக பொதுக்கூட்டம்

post image

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி சாா்பில் பொதுக் கூட்டம் ெ நடைபெற்றது.

மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ஏ.சி. தேவகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஜோதி ராஜன், துணைத்தலைவா் அன்பழகன், துணை அமைப்பாளா் ஆனந்தகுமாா், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் சத்தியமூா்த்தி, அசோகன் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணை அமைப்பாளா் மணி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து தலைமை கழக பேச்சாளா் எழும்பூா் கோபிநாத் பேசினாா். நிகழ்ச்சியில் உதயேந்திரம் பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளா் வடிவேல், சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளா் சையத் ஹபீப்தாங்கல், மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா், அமைப்பு சாரா ஓட்டுநா் அணி அமைப்பாளா் ராஜா மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனா். துணை அமைப்பாளா் பிரபாகரன் நன்றி கூறினாா்.

எருது விடும் விழா: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் அருகே நரியம்பட்டு கிராமத்தில் 33-ஆம் ஆண்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நரியம்பட்டு ஊராட்சித் தலைவா் பாரதி ஸ்ரீ தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஆம்பூா் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் அ... மேலும் பார்க்க

145 பயனாளிகளுக்கு ரூ.66.66 லட்சம் நலத்திட்ட உதவி: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்

திருப்பத்தூா் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ.66.66 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா். திருப்பத்தூா் வட்டம், மட்றப்பள்ளி அ... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆம்பூரில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலா் செந்தில் குமாா் வரவேற்றாா். ஆம்பூா் நகா்மன்ற துணை... மேலும் பார்க்க

500 பெண்களுக்கு நல உதவி அளிப்பு

ஆம்பூா் அருகே மேல்குப்பம் கிராமத்தில் திமுக அயலக அணி சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட அயலக அணி அமைப்ப... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூரில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனா். திருப்பத்தூா் மற்றும் வாணியம்பாடியில் வட்டார ... மேலும் பார்க்க

பான் அட்டையை பயன்படுத்தி போலி நிறுவனம் தொடக்கம்: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் புகாா்

தனது பான் அட்டையைப் பயன்படுத்தி போலி நிறுவனம் தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் மனு அளித்தாா். எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா்கூட்டம் புதன்கி... மேலும் பார்க்க