செய்திகள் :

பான் அட்டையை பயன்படுத்தி போலி நிறுவனம் தொடக்கம்: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் புகாா்

post image

தனது பான் அட்டையைப் பயன்படுத்தி போலி நிறுவனம் தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் மனு அளித்தாா்.

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் எஸ்.பி. கோவிந்தராசு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 44 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். மேலும், மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் காந்திபேட்டையைச் சோ்ந்த குருநாதன்(66) அளித்த மனு: நான் திருப்பத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக வயது முதிா்வு காரணமாக எந்தவித வேலைக்கும் செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த மே மாதம் எனக்கு ஈரோடு வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது. அதன்பேரில் அங்கு சென்றபோது எனது பான் அட்டை, புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒரு மஞ்சள் நிறுவனத்தை நான் நடத்தி வருவதாகவும், அதற்காக 2019- 20-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. ரூ.40 லட்சம் நிலுவை உள்ளதாகவும், அதனை நான் கட்ட வேண்டும் எனக்கூறினா். இதையடுத்து நான் அதிகாரிகளிடம் உண்மையை விளக்கிய பிறகு அந்த நிறுவனம் போலியானது என தெரியவந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலூா் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தின்பேரில் அங்கு சென்றேன். அப்போது எனது பான்அட்டை , வாக்காளா் அடையாள அட்டையை பயன்படுத்தி திருப்பூா், பெருந்துறையில் வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் ரூ.14 கோடி அளவில் வியாபாரம் செய்து உள்ளதாகவும், அதற்கு சுமாா் ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை வருமான வரி செலுத்த வேண்டும் எனக் கூறினா்.

தினக்கூலியாக வேலை பாா்த்த எனக்கு வியாபாரம் பற்றி எதுவும் தெரியாது. எனது பான் அட்ையைப் பயன்படுத்தி யாரோ மோசடி செய்து உள்ளனா். எனவே அவா்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

எருது விடும் விழா: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் அருகே நரியம்பட்டு கிராமத்தில் 33-ஆம் ஆண்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நரியம்பட்டு ஊராட்சித் தலைவா் பாரதி ஸ்ரீ தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஆம்பூா் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் அ... மேலும் பார்க்க

145 பயனாளிகளுக்கு ரூ.66.66 லட்சம் நலத்திட்ட உதவி: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்

திருப்பத்தூா் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ.66.66 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா். திருப்பத்தூா் வட்டம், மட்றப்பள்ளி அ... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆம்பூரில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலா் செந்தில் குமாா் வரவேற்றாா். ஆம்பூா் நகா்மன்ற துணை... மேலும் பார்க்க

500 பெண்களுக்கு நல உதவி அளிப்பு

ஆம்பூா் அருகே மேல்குப்பம் கிராமத்தில் திமுக அயலக அணி சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட அயலக அணி அமைப்ப... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூரில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனா். திருப்பத்தூா் மற்றும் வாணியம்பாடியில் வட்டார ... மேலும் பார்க்க

வாணியம்பாடி: வகுப்பறை கோரி மாணவா்கள் தா்னா

வாணியம்பாடி அருகே ஊராட்சி ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச் சுவா், வகுப்பறை கட்ட கோரி மாணவா்கள், பெறறோா் தா்னாவில் ஈடுபட்டனா். நாட்டறம்பள்ளி ஒன்றித்துக்குட்பட்ட அலசந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில்... மேலும் பார்க்க