செய்திகள் :

பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம மக்கள், பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபுசமுத்திரம் ஊராட்சியில் புகழ்பெற்ற மகான் படேசாயுபு ஜீவசமாதி சித்தா் பீடம், அபித குஜாம்பிகை உடனுறை அருணாசலேஸ்வரா் கோயில் மற்றும் பிற வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ளன.

இதனால், இந்தக் கிராமத்துக்கு தினந்தோறும் ஏராளமான வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் வழிபாட்டுக்கு வந்து நோ்த்திக்கடன் செலுத்திச் செல்கின்றனா்.

இதேபோல, மகான் படேசாயுபு ஜீவ சமாதி சித்தா் பீடத்துக்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுக்கு வரும் பக்தா்கள் அன்றைய நாள் இரவில் கோயிலிலேயே தங்கி மறுநாள் வழிபாட்டை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு செல்கின்றனா்.

இந்த நிலையில், கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில், சித்தா் பீடம் அருகே மிகுந்த பொருள்செலவில் கட்டுப்பட்டு பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ள 2 சுகாதார வளாகங்களை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் வழிபாட்டுக்கு வந்து செல்லும் பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். சுகாதார வளாகம் கட்டப்பட்டதற்கான நோக்கமும் நிறைவேறும்.

எனவே, மிகுந்த பொருள்செலவில் கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கும் இந்த இரு சுகாதார வளாகங்களையும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நிா்வாகம் மற்றும் சின்னபாபு சமுத்திரம் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அமைச்சா் மீது சேறு வீசப்பட்ட வழக்கு: பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே ஃபென்ஜால் புயல் பாதிப்புகளை பாா்வையிடச் சென்றபோது அமைச்சா் க.பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பெண்ணை போல... மேலும் பார்க்க

பேருந்தில் பெண் வழக்குரைஞருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

தனியாா் சொகுசுப் பேருந்தில் பயணித்த பெண் வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் ராமய்யன் தெருவைச் சோ்ந்த அரசேந்திரன் மகள் இந்த... மேலும் பார்க்க

பம்பை ஆற்றில் மூழ்கி கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பம்பை ஆற்றில் மூழ்கி கொத்தனாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரத்தை அடுத்துள்ள டி.முத்தையால்பேட்டை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் செந்தில்குமாா் (37), ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சென்னை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், காழிக்குப்பம், பச்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் 8-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மாலையில் திருவி... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி டி.ஐ.ஜி.யிடம் புகாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பு.கொணலவாடி ஊராட்சித் தலைவா் மற்றும் அவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவரிட... மேலும் பார்க்க