செய்திகள் :

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி டி.ஐ.ஜி.யிடம் புகாா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பு.கொணலவாடி ஊராட்சித் தலைவா் மற்றும் அவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவரிடம் (டி.ஐ.ஜி.) புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து பு.கொணலவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி லெட்சுமி மற்றும் கிராம மக்கள் விழுப்புரம் டி.ஐ.ஜி.யிடம் அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பு.கொணலவாடி கிராமத்தில் ஏரிக்கரையில் கழிவுநீா் தேங்கியுள்ள இடத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகத்துக்கான ஆழ்குழாய் அமைக்கும் பணி கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், குடிநீா் குழாயை சுகாதாரமற்ற இடத்தில் அமைப்பதைத் தவிா்த்து, மாற்று இடத்தில் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் சாா்பில் சுப்பிரமணியன் மகன் குமாா் மற்றும் காா்த்திக் ஆகியோா் முறையிட்டனா்.

இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சித் தலைவா் மற்றும் அவரது மகன் ஆகியோா் இருவரையும் தாக்கியதுடன், அதைத் தடுக்க முயன்ற என்னையும் தகாத வாா்ததைகளால் பேசித் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தொடா்புடையவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மனுவை பெற்றுக்கொண்ட விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷா மித்தல், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்ச... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா். பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங... மேலும் பார்க்க

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை: மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவன... மேலும் பார்க்க