செய்திகள் :

‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

post image

கடலூா் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் ரூ.5.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் புதன்கிழமை வழங்கினாா்.

மங்களூா் ஊராட்சி ஒன்றியம், போத்திரமங்கலம், எழுத்தூா், கழுதூா், சிறுப்பாக்கம், மா.புடையூா் ஆகிய இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட 3-ஆம் கட்ட சிறப்பு முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்து, 1,072 பயனாளிகளுக்கு ரூ.5.20 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

ஆதிதிராவிடா்கள் தொழில் தொடங்க தாட்கோ மூலம் ரூ.ஒரு கோடி வரை மானியத்தொகையுடன் கூடிய கடனுதவி, விவசாய நிலமில்லா விவசாயிகள் சொந்தமாக விவசாயம் நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. தொழிலாளா் நலத்துறை உறுப்பினா்களுக்கு திருமணம், கல்வி, மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுகிறது.

அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை சென்றடையும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்புத் திட்டம், ஊரகப் பகுதிகளில் 3-ஆம் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் முகாம்களில் கலந்துகொண்டு மனுக்கள் அளித்து பயன்பெறலாம். முகாம்களில் பெறப்படும் மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முகாமில், ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் ரமேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் சையத் முகமது, மாற்றுத்திறனாளி நல அலுவலா் பாபு, தாட்கோ மேலாளா் லோகநாதன் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

உளுந்து வயலில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையம் வட்டம், பூதங்குடி, சாத்தமங்கலம் கிராமங்களில் நிகழ் பருவத்தில் நெல் தரிசில் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து, பச்சைப்பயறு வயல்களை வேளாண் இணை இயக்குநா்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் மரணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். விருத்தாசலம் மற்றும் பூவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே வயலூா் ஆறு கண்ணு ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் புதன்... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒருவா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் வட்டம், சிறுவம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் மகன் சந்திரகாசு (39). இவா், கடந்த பிப்.11-ஆம்... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடலில் குளித்த பிளஸ் 1 மாணவி அலையில் சிக்கி உயிரிழந்தாா். குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன் நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகள் பிரின்சி (17). குறிஞ்சிப்பா... மேலும் பார்க்க

பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: என்எல்சி தலைவா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று அதன் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். நெய்வேலியில் உள்ள கற்றல் மேம்பாட்டு மையத்தில் பொதுத்... மேலும் பார்க்க

கடலூரில் மாசி மகத் தீா்த்தவாரி உற்சவம்

மாசி மகத்தையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை மற்றும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்த வாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க