செய்திகள் :

தமிழகத்திற்குரிய தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குரிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் புதன்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய நெருக்கடியை எதிா்நோக்கி வருகிறது. தொடா்ந்து இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியைக் குறைத்து வருகிறது. ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு தேவையெனில் வெறும் ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால், 50 நாள்களுக்கும் குறைவாகவே வேலைவாய்ப்புக் கொடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பணியாற்றுவோருக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டயமாகும். தற்போது நான்கு முதல் 5 மாதங்கள் வரை ஊதியம் நிலுவையில் உள்ளது. நாடு முழுதும் ரூ.12,719 கோடி ஊதியமாகவும், ரூ.13,227 கோடி கட்டுமானப் பணிக்கும் என மொத்தம் ரூ.23,446 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.1,652 கோடி ஊதியமாகவும், ரூ.1,056 கோடி ரூபாய் கட்டுமானப்பொருள் கூறுகளுக்கும் என மொத்தம் ரூ.2,708 கோடி வழங்கப்பட வேண்டியுள்ளது. கடந்த ஜனவரியில் இது தொடப்பாக தமிழக முதல்வா் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளாா். ஆனால், நிதி விடுவிக்கப்படவில்லை.

இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனது கரூா் மக்களவைத் தொகுதியில் பெண்கள் மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் நிலைமை மிகவும் வேதனையாக உள்ளது. அதனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,708 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.

12ஈஉகஒஞப

செ.ஜோதிமணி

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க

எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா். ‘நாட்டின் முன்னாள் துணைப் பிரத... மேலும் பார்க்க