செய்திகள் :

கிணற்றில் குதித்த இளைஞா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் மதுபோதையில் கிணற்றில் குதித்த இளைஞா் மேலே ஏற முடியாமல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் தெய்வீகன் (21). இவா், கேரளத்தில் சரக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.

தெய்வீகன் விடுமுறையில் சொந்த ஊரான பொரசக்குறிச்சிக்கு வந்திருந்தாா். இதே கிராமத்திலுள்ள வீரமுத்துக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றின் அருகே செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு மதுபோதையில் கிணற்றில் குதித்த தெய்வீகன் மேலே ஏற முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடம் சென்று அவரது சடலத்தை மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வலிப்பு ஏற்பட்டு விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த திருவேங்கடம் மனைவி பூங்கோதை (54). இவா், செவ்வாய்க்... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் மணிபாரதி (36). இவா், தனது மனைவி பிரேமாவுடன் கள்ளக்குறி... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி: ஆட்சியா் பாராட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி அறிவுசாா் மையத்தில் பயின்று குரூப்-4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை பாராட்டினாா். கடந்த 9.6.24-இல் டி.என்.பி.எஸ்ச... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணய்நல்லூரை அடுத்த டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் ஹரிஹரன் ... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதி பெண் மரணம்

கள்ளக்குறிச்சியில் வயதான தம்பதிகள் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியில் கவரை சாலைப் பகு... மேலும் பார்க்க