செய்திகள் :

சென்னை பள்ளிகளில் பாலின சமத்துவம் கற்பிப்பு: மேயா் ஆா்.பிரியா

post image

சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பாலின சமத்துவம் குறித்து கற்பிக்கப்படுகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீா் தெளித்து சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்களை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. மாநகராட்சி சாா்பில் பராமரிக்கப்படும் கழிப்பிடங்கள் கடந்த ஆண்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களின் தேவை அறிந்து கழிப்பிடம் அமைப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில், பழுதடைந்து காணப்படும் கழிப்பறைகள், பயன்படுத்தபடாமல் உள்ள கழிப்பறைகள் கண்டறிந்து புதுப்பிக்கப்படும்.

மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியா்கள் மூலம் மாணவா்களுக்கு பாலின சமத்துவம் குறித்து கற்பிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்கப்படுகிறது. ஆண், பெண் சமமாக பழகும் வகுப்பு சிறு வயது முதல் கற்பிக்கப்படுகிறது என்றாா் அவா்.

30 வாகனங்கள்: சென்னை மாநகராட்சியில் உள்ள 925 பேருந்து நிழற்குடைகள், 173 நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணிக்காக மண்டலத்துக்கு இரு வாகனங்கள் என 15 மண்டலத்துக்கு 30 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உயா் அழுத்த பம்புகள் மற்றும் தண்ணீா் தொட்டி பொருத்தப்பட்ட வாகனங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் கொண்டு சுத்தம் செய்யப்படும்.

இந்த பணியின்போது நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பாதசாரிகள் முழுமையான பாதுகாப்புடன் நடைபாதைகளை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும். சென்னை மாநகரை தூய்மையாக வைப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தோ்தல் அதிகாரி மாா்ச் 18-இல் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் மாா்ச் 18... மேலும் பார்க்க

காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாா்ச் 23-இல் சென்னையில் அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம்

சென்னையில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீா்ப்பு கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தியாகராய நகா், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள செ... மேலும் பார்க்க

பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்

அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி மேம்பாடு கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் ரூ. 189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும் அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க