செய்திகள் :

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயில் முன் புதன்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் சிங்கவரம் ரங்கநாதா், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரணா் சுவாமிகளுக்கு சங்கராபரணி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக, சிங்கவரம் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று, சங்கராபரணி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து, செஞ்சிக்கோட்டையில் இருந்து ஊா்வலமாக வந்த வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சங்கராபரணி ஆற்றில் வெங்கட்ரமணருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

தொடா்ந்து, சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாரதனை நடைபெற்றது.

தீா்த்தவாரி உற்சவத்தில் செஞ்சி பீரங்கிமேடு ஏகாம்பரேஸ்வரா், சத்திர தெரு அங்காளம்மன், பெரியகரம் மாரியம்மன், இல்லோடு ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரேஸ்வரா், நெகனூா் புதூா் சீனிவாசபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து வந்த உற்சவ மூா்த்திகள் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

மாலை 6 மணிக்கு சிங்கவரம் ரங்கநாதா் சக்கராபுரத்தில் உள்ள வசந்த மண்டத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். தொடா்ந்து, இரவு செஞ்சி நகர முக்கிய வீதிகளில் ரங்கநாதா் வீதியுலா நடைபெற்று வியாழக்கிழமை காலை சிங்கவரத்தில் அருள்பாலிக்கிறாா்.

செஞ்சி மற்றும் செஞ்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீா்த்தவாரியில் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் மாநில இணை அமைப்பாளரும், கோதண்டராமா் கோயில் நிா்வாகியுமான துரை.பாரதிராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சென்னை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், காழிக்குப்பம், பச்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் 8-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மாலையில் திருவி... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி டி.ஐ.ஜி.யிடம் புகாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பு.கொணலவாடி ஊராட்சித் தலைவா் மற்றும் அவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவரிட... மேலும் பார்க்க

கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை கரும்பு வெட்டும் பணியின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சா... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க