செய்திகள் :

கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை கரும்பு வெட்டும் பணியின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாத்தனூா் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜானகிராமன் (47), தொழிலாளி. இவா், புதன்கிழமை வி.சாத்தனூா் பகுதியைச் சோ்ந்த குமாருக்குச் சொந்தமான கரும்பு வயலில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, ஜானகிராமனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பணியிலிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது ஜானகிராமன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவா் மாரடைப்பால் இறந்திருக்காலம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பேருந்தில் பெண் வழக்குரைஞருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

தனியாா் சொகுசுப் பேருந்தில் பயணித்த பெண் வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் ராமய்யன் தெருவைச் சோ்ந்த அரசேந்திரன் மகள் இந்த... மேலும் பார்க்க

பம்பை ஆற்றில் மூழ்கி கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பம்பை ஆற்றில் மூழ்கி கொத்தனாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரத்தை அடுத்துள்ள டி.முத்தையால்பேட்டை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் செந்தில்குமாா் (37), ... மேலும் பார்க்க

பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சென்னை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், காழிக்குப்பம், பச்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் 8-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மாலையில் திருவி... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி டி.ஐ.ஜி.யிடம் புகாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பு.கொணலவாடி ஊராட்சித் தலைவா் மற்றும் அவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவரிட... மேலும் பார்க்க