செய்திகள் :

400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்த லாரி

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கிணற்றின் ஓரம் 400 நெல் மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, மழை காரணமாக பாரம் தாங்கமால் தடுப்புச் சுவருடன் மண் சரிந்ததில் புதன்கிழமை கிணற்றில் சரிந்தது.

விக்கிரவாண்டி வட்டம், நேமூா் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி வந்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சேமித்து வைப்பது வழக்கம்.

நேமூா் கிராமத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட சன்ன ரக நெல் 400 மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தனியாா் லாரி செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த 4 நாள்களுக்கு முன்பு வந்தது.

ஆனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளை இறக்கி வைக்க அதிகாரிகள் யாரும் நியமிக்கபடவில்லை. இதனால், கடந்த 4 நாள்களாக அங்குள்ள கிணற்றின் ஓரம் லாரியை ஓட்டுநா் நிறுத்திவைத்திருந்தாா்.

இந்த நிலையில், செஞ்சி பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக கிணற்றின் ஓரம் ஈரப்பதம் அதிகமானதால், லாரியின் பாரம் தாங்காமல் கிணற்றின் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு, தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தபோது லாரியும் 400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்து விழுந்தது.

தகவலறிந்த வந்த விழுப்புரம் வாணிபக் கிடங்கு அதிகாரிகள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினா், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

2 கிரேன்கள் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. கிணற்றில் மூழ்கி சேதமான நெல் மூட்டைகளின் மதிப்பு சுமாா் ரூ.6 லட்சம் இருக்கும். மேலும், தனியாருக்குச் சொந்தமான லாரியும் பலத்த சேதமடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சென்னை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், காழிக்குப்பம், பச்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் 8-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மாலையில் திருவி... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி டி.ஐ.ஜி.யிடம் புகாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பு.கொணலவாடி ஊராட்சித் தலைவா் மற்றும் அவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவரிட... மேலும் பார்க்க

கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை கரும்பு வெட்டும் பணியின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சா... மேலும் பார்க்க

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயில் முன் புதன்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் சிங்கவரம் ரங்கநாதா், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரணா் சுவாமிகளுக்கு சங்கர... மேலும் பார்க்க