செய்திகள் :

"அது நமாஸ் அல்ல ஷஷாங்காசனம்"- யோகா கற்றுத் தந்த இஸ்லாமிய ஆசிரியருக்கு எதிராக இந்து அமைப்பு போராட்டம்

post image

மத்திய பிரதேச மாநிலம் பர்ஹன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் அருகில் இருக்கும் தியோஹரி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜபூர் தட்வி.

இப்பள்ளி மாணவர்கள் தீபாவளி விடுமுறையில் யோகா என்ற பெயரில் நமாஸ் செய்வது போன்று செய்தனர். இதனை மாணவர்கள் நமாஸ் செய்வதாகப் புரிந்து கொண்ட பெற்றோர் சிலர் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் இது குறித்து கல்வித்துறை அதிகாரிக்குத் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கல்வித்துறை சார்பாக இது குறித்து விசாரிக்க தனிக்கமிட்டி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும் இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அக்கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் முஸ்லிம் ஆசிரியர் யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் என்ற பெயரில் மாணவர்களுக்கு நமாஸ் செய்ய கற்றுக்கொடுத்து மாணவர்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாகக் கூறி போராட்டம் நடத்தினர்.

அதோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.

அதோடு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக மாவட்ட கூடுதல் கலெக்டர் வீர் சிங் தெரிவித்துள்ளார்.

ஷஷாங்காசனம்
ஷஷாங்காசனம்

ஆனால் இக்குற்றச்சாட்டுகளை ஆசிரியர் ஜபூர் தட்வி மறுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாணவர்களுக்கு யோகா கற்பிக்க அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஆசனம் ஷஷாங்காசனத்தின் காரணமாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது பார்வைக்கு நமாஸ் தோரணைகளில் ஒன்றை ஒத்திருக்கிறது. குழந்தைகள் வெறுமனே யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் போஸ் தொழுகை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. என் தரப்பு வாதத்தைக் கேட்காமல் என்னை இடைநீக்கம் செய்தது அநியாயம்" என்று தட்வி எழுதினார். சமூக ஆர்வலர்கள் பலரும் தட்விக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி ... மேலும் பார்க்க

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க