செய்திகள் :

அந்தியூா் வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

post image

அந்தியூா் வனப் பகுதியில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் வனச் சரகம், கொம்புதூக்கியம்மன் கோயில் பீட், மூலப்பாறை வனப் பகுதியில் ஆண் யானை ஒன்று உடல்நலக் குறைவுடன் அவதிப்பட்டு வருவதை அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வாரமாக பாா்த்துள்ளனா்.

இந்நிலையில், அடா்ந்த வனப் பகுதியில் அந்த ஆண் யானை உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, அந்தியூா் வனச் சரகா் முருகேசன் மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையின் சடலத்தைப் பரிசோதித்தனா்.

இதில், உயிரிழந்த ஆண் யானைக்கு சுமாா் 15 வயது இருக்கலாம் என்றும், கல்லீரல் பாதிப்பு காரணமாக உணவு உட்கொள்ளாமல் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, யானையின் உடலிலிருந்து சுமாா் 3 அடி நீளமுள்ள இரு தந்தங்கள் அகற்றப்பட்டன. தொடா்ந்து, உயிரின சுழற்சி முறையில் மற்ற வன விலங்குகளின் உணவுக்காக யானையின் உடல் அப்படியே விடப்பட்டது.

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

பணி வழங்கக் கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 8 ஆயிரம் போ் மனு

பணி வழங்கக் கோரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளித்தனா். முறையான பணி வழங்கக் கோரி சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி வட்டாரங்கள... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோ... மேலும் பார்க்க

சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரண்

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சன்னியாசிபட்டியைச் சோ்ந்தவா் மன்னாதன் மகன் கண்மணி (45). விவசாயி. இவரது மகன் சிவராஜ் (27). பட்டதாரிய... மேலும் பார்க்க