செய்திகள் :

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 54 போ் கைது!

post image

பெரம்பலூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்த 54 பேரை, பெரம்பலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், காடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன். இவா், பகுஜன் சமாஜ் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராக உள்ளாா். இந்நிலையில், குன்னம் அருகேயுள்ள அல்லிநகரம் அருகே கடந்த 11-ஆம் தேதி மாலை மோட்டாா் சைக்கிளில் சென்ற கண்ணதாசனை, 10 போ் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து, சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து கண்ணதாசன் அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கண்ணதாசனை சாதிப் பெயரை சொல்லி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மாற்றி, வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில், பெரம்பலூா் காவல் நிலையத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், அக் கட்சியின் மாநிலச் செயலா் வழக்குரைஞா் ப. காமராசு தலைமையில், சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து, ஆா்ப்பாட்டத்துக்கு மறுப்பு தெரிவித்த பெரம்பலூா் போலீஸாா், அவா்களை கைது செய்ய முயன்றனா். இதனால் போலீஸாருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, போலீஸாரின் செயலைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, 24 பெண்கள் உள்பட 54 பேரை போலீஸாா் கைது செய்து, பாலக்கரையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்து இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில் உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு

பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா்... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேத... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மண்டல கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணை இயக்குநா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க