செய்திகள் :

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்கள் மீது எந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லையெனினும், இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவி வருவதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இடையே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது, ஏப்ரல் 24 ஆம் தேதியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தோம்; ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திலாவது அவர் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, ``ஆபரேஷன் சிந்தூர் என்ற துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்ட நமது இந்திய ஆயுதப்படைகள் குறித்து பெருமிதம் கொள்கிறோம். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த நாளிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் ஆயுதப்படைகள் மற்றும் அரசாங்கத்துடன் உறுதியாக நிற்கிறது.

எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும், காங்கிரஸ் ஆதரிக்கிறது. இந்த நேரத்தில், தேசிய ஒற்றுமையும் மிக முக்கியமானவை. இந்திய தேசிய காங்கிரஸ் நமது ஆயுதப் படைகளுடன் உறுதியாக நிற்கும்’’ என்று தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் குறித்து விவாதிக்க, ஏப்ரல் 24 ஆம் தேதியில் தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவில்லை.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்! அமைதி கோரும் ரஷியா!

ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது? 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று(மே 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.அவர் தெரிவித்திருப்பதாவது: “ஆபரேஷன்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக காஷ்மீரில் நிவாரண முகாம்கள்

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவியதைத் தொடர்ந்து, அங்கு எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி தர இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம்!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவ கமாண்டர்களுக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மேற்கு எல்லையில் ராணுவ தளபதிகள் உடன் தலைமை தளபதி உபேந்திர திவேதி ஞாயிற்று... மேலும் பார்க்க

எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை: மத்திய அரசு

புது தில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று(மே 11) மாலை தெரிவித்துள்ளன. மேலும் பார்க்க

பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கூடத்தை’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ச... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!

புது தில்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை உடனடியாகக் கூட்ட பிரதமருக்கு நாடாளுமன்ற இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ... மேலும் பார்க்க