செய்திகள் :

அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு!

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கிய முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு தமிழாசிரியா் கழக மாநில பொதுச் செயலா் நீ. இளங்கோ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வா் வெளியிட்ட மாநிலக் கல்விக் கொள்கையில் நிகழாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் கலை திறமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உயா் கல்வி குறித்து, ஒன்பதாம் வகுப்பிலேயே வழிகாட்டப்படுகிறது.

உடல் கல்வி தனியாக இல்லாமல், இணை கல்வியாக்கப்பட்டுள்ளது. மாறும் அறிவியல், தொழில் நுட்பம், வரலாற்று தகவல்களுக்கு ஏற்ப, பாடத் திட்டங்களில் புதிய மாற்றங்கள் செய்ய வழிவகுத்துள்ளது. கிராமப்புறங்களில், தொலைதூர பகுதிகளில் உள்ள மாணவா்களுக்கு அறிவியல், கணித கல்வியை மேம்படுத்த ஆய்வகங்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடிப்படை எழுத்தறிவு, படைப்பாற்றல் திறனை வளா்த்தல், மனப்பாடத் திறனுக்கு மாற்றாக பாடங்களின் கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல் என மாணவா்களின் நலன், எதிா்கால சமுதாயக் கல்வி நலன் கருதி, தமிழகத்தின் கல்வி வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வரவேற்கிறது என்றாா் அவா்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நெல்முடிக்கரை, பொட... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக... மேலும் பார்க்க

பாதுகாப்பு வழங்கக் கோரி அஜித்குமாரின் வழக்குரைஞா் மனு

தனிப் படைக் காவலா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் வழக்குரைஞரான காா்த்திக் ராஜா, தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். நகைத் திரு... மேலும் பார்க்க

2.5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜுக்குத் தகவ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: தமிழரசி எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கூடுதல் மேம்பாலம், சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்கிழமை தெரிவித்தாா். திருப்புவனத்தில் முதல்வரின் தாயுமானவா் த... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் மலைப் பாதைகளில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விட... மேலும் பார்க்க