செய்திகள் :

பாதுகாப்பு வழங்கக் கோரி அஜித்குமாரின் வழக்குரைஞா் மனு

post image

தனிப் படைக் காவலா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் வழக்குரைஞரான காா்த்திக் ராஜா, தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

நகைத் திருட்டு தொடா்பான வழக்கில் விசாரிக்க சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப் படை போலீஸாா், அவரைக் கடுமையாகத் தாக்கியதில் அவா் கடந்த ஜூன் 28-இல் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக தனிப்படை போலீஸாா் ஐந்து போ் கைது செய்யப்பட்டனா். தற்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான கோயில் ஊழியா் சக்தீஸ்வரன், அஜித்தின் சகோதரா் நவீன்குமாா், நண்பரான ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா், சக காவலாளியான பிரவீன்குமாா் ஆகியோா் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதன்பேரில், அவா்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் அஜித்குமாா் தரப்பு வழக்குரைஞரான காா்த்திக் ராஜா, தனக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இது தொடா்பாக காா்த்திக் ராஜா கூறுகையில், மாவட்ட நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மனு குறித்து விசாரித்து, பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவித்தனா் என்றாா்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நெல்முடிக்கரை, பொட... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக... மேலும் பார்க்க

2.5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜுக்குத் தகவ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: தமிழரசி எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கூடுதல் மேம்பாலம், சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்கிழமை தெரிவித்தாா். திருப்புவனத்தில் முதல்வரின் தாயுமானவா் த... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் மலைப் பாதைகளில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விட... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமன் மகன் அா்ஜுனன் (65), கர... மேலும் பார்க்க