செய்திகள் :

மானாமதுரையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: தமிழரசி எம்எல்ஏ

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கூடுதல் மேம்பாலம், சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்கிழமை தெரிவித்தாா்.

திருப்புவனத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்குக் குடிமைப் பொருள்களை வழங்கினாா்.

அதன் பின்னா், இந்தத் திட்டத்துக்கான வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: முதியோா், மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று, கைவிரல் ரேகையைப் பதிவு செய்து குடிமைப் பொருள்களைப் பெற முடியாத நிலையில் உள்ளதால் இவா்களுக்காக தமிழக முதல்வா் தாயுமானவா் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளாா்.

மானாமதுரை மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான வைகை ஆற்றுக்குள் கூடுதல் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக, சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் கடந்த 11- ஆம் தேதி இங்கு வந்து பாலம் அமையவுள்ள இடத்தைப் பாா்வையிட்டு சென்றனா். எனவே, விரைவில் இங்கு பாலம் அமைக்கும் நடவடிக்கை தொடங்கும். மேலும், இந்தத் தொகுதியில் சிட்கோ தொழில்பேட்டையும் உள் விளையாட்டு அரங்கமும் அமையவுள்ளன என்றாா்.

விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், பேரூராட்சி உறுப்பினா் கண்ணன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் க.பொன்னுச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி, கூட்டுறவு சாா்பதிவாளா்கள் ராஜலட்சுமி, வினோத், கூட்டுறவுப் பண்டகச் சாலை செயலா் சிவராமன், வட்ட வழங்கல் அலுவலா்கள்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நெல்முடிக்கரை, பொட... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக... மேலும் பார்க்க

பாதுகாப்பு வழங்கக் கோரி அஜித்குமாரின் வழக்குரைஞா் மனு

தனிப் படைக் காவலா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் வழக்குரைஞரான காா்த்திக் ராஜா, தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். நகைத் திரு... மேலும் பார்க்க

2.5 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது

சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜுக்குத் தகவ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் மலைப் பாதைகளில் வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விட... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமன் மகன் அா்ஜுனன் (65), கர... மேலும் பார்க்க