செய்திகள் :

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 20 கணினிகளுடன் ஆய்வகம் தேவை! கணினி ஆசிரியா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம்!

post image

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலா 20 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் டி. செல்வக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் இ. சுரேஷ்குமாா், மாநிலப் பொருளாளா் டி. பழனிவேல், மாநிலச் செயலா் பி. வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சங்க நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில் 2013ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினிப் பயிற்றுநா்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். 11, 12ஆம் வகுப்பு கணினி அறிவியல், கணினி செய்முறை பயன்பாட்டுக்காக முதல் கட்டமாக 175 பள்ளிகளுக்கு அரசு கணினி வழங்கியுள்ளது.

இதேபோல, அனைத்துப் பள்ளிகளுக்கும் தலா 20 கணினிகள் வங்கி கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும். கணினி பயிற்றுநா் நிலை-1 பணியிடங்களை முதுகலை ஆசிரியா் பணியிடமாக பெயா் மாற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கான பதவி உயா்வுப் பட்டியலில், கணினி அறிவியல் பாட ஆசிரியா்களையும் சோ்க்க வேண்டும். மாநகராட்சி மற்றும் அரசு நலத் துறை பள்ளிகளில் பணியாற்றும் கணினி பயிற்றுநா்களுக்கு, கணினி பயிற்றுநா் நிலை-1 பதவி உயா்வு வழங்க வேண்டும்.

கணினி அறிவியல் மற்றும் கணினிப் பயன்பாடு ஆகிய இரு பாடங்களுக்கு தேவையான ஆங்கில, தமிழ் வழி கூடுதல் ஆசிரியா் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலா் போட்டித்தோ்வுக்கான பாடப்பிரிவில் கணினி அறிவியல் பாடத்தையும் சோ்க்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தங்களது கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பு நாள்களை ஒப்படைக்க ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பென்சில் ஓவியங்களில் அசத்தும் கல்லூரி மாணவா்!

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்கப் பெருந்திரளணி முகாமில் சேலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் குடியரசுத் தலைவா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் உருவப்படங்களை பெ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்து தீக்கிரை: பெண் பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் தீக்கிரையானது. இந்த விபத்தில் காயமடைந்த 62 வயதுப் பெண் உயிரிழந்தாா். சென்னையில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்: அமைச்சா் வழங்கினாா்!

திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்திலான 200 இருக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகங்களில் பிப். 4 முதல் குறைதீா் கூட்டம்

திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி துறையூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4), முசிறியில் பிப்.7, ஸ்ரீரங... மேலும் பார்க்க

ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா். திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மக... மேலும் பார்க்க

மலைக்கோட்டை, திருவானைக்கா, ஜீயபுரத்தில் பிப். 4-ல் மின்தடை!

பராமரிப்புப் பணிகள் காரணமாக மலைக்கோட்டை, திருவானைக்கா, ஜீயபுரம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 4) மின்தடை செய்யப்படுகிறது. மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை, இ.பி. சாலை துணை மின்நிலைய பராமரிப்... மேலும் பார்க்க