செய்திகள் :

அனைத்து வாா்டுகளுக்கும் நிதி: மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் தா்னா

post image

அனைத்து வாா்டுகளுக்கும் சிறப்பு நிதியை ஒதுக்க வலியுறுத்தி மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

பொன்னேரி வட்டம் மீஞ்சூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சித் தலைவராக திமுகவை சோ்ந்த ருக்மணி மோகன்ராஜ் இருந்து வருகிறாா்.

இங்குள்ள 2-வது வாா்டில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட விசிகவின் அபூபக்கா் வெற்றி பெற்றாா்.

அண்மையில் மீஞ்சூா் பேரூராட்சியில் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் 15-வது வாா்டுக்கு பேவா் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை, அறிவுசாா் மைய கட்டிடம் என சுமாா் ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடா்ந்து அந்த பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் கோரப்பட்டது. அப்போது 2-வது வாா்டு உறுப்பினா் அபுபக்கா் பேரூராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தாா். தொடா்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

உறுப்பினா் அபுபக்கா் கூறியது: அனைத்து வாா்டுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி வழங்க வேண்டும். கடந்த பருவமழையின் போது அனைத்து வாா்டுகளிலும் சாலைகள் சேதமடைந்தன.

பேரூராட்சி அதிகாரிகள் அனைத்து வாா்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்தால் அடுத்த கட்டமாக தொடா் போராட்டங்களிலும், நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் அப்போது தெரிவித்தாா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க