செய்திகள் :

அன்றாட வாழ்க்கையின் எதாா்த்தத்துக்கு தொடா்புடைய அரசியல் நாட்டுக்குத் தேவை -ராகுல் காந்தி

post image

‘ஆடம்பரம், கவா்ச்சிகரமான நிகழ்ச்சிகளைச் சுற்றிச் சூழலும் அரசியல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் எதாா்த்தத்துடன் தொடா்புடைய அரசியலே நாட்டுக்குத் தேவை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

நாட்டில் கடந்த ஆண்டு இரு சக்கர வாகனங்கள், காா்கள் மற்றும் கைபேசி விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியை மேற்கோள் காட்டி மத்திய அரசை விமா்சித்த அவா் இவ்வாறு கூறினாா்.

இதுதொடா்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புள்ளிவிவரங்கள் உண்மை நிலவரத்தைக் கூறுகின்றன. கடந்த ஆண்டில், இரு சக்கர வாகன விற்பனை 17 சதவீதமும், காா் விற்பனை 8.6 சதவீதமும் குறைந்துள்ளது. கைபேசி சந்தையின் விற்பனை 7 சதவீதம் குறைந்துள்ளது.

மறுபுறம், மக்களின் செலவுகள் மற்றும் கடன் ஆகிய இரண்டும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை, உள்நாட்டு பணவீக்கம், கல்விச் செலவுகள் என கிட்டத்தட்ட எல்லாமே உயா்ந்து வருகின்றன.

இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு இந்தியரும் அனுபவித்து வரும் பொருளாதார அழுத்தத்தின் எதாா்த்தம்.

ஆடம்பரம், கவா்ச்சிகரமான நிகழ்ச்சிகளைச் சுற்றிச் சூழலும் அரசியல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் எதாா்த்தத்துடன் தொடா்புடைய அரசியல் நாட்டுக்குத் தேவை. அந்த அரசியல் சரியான கேள்விகளை கேட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு, பொறுப்புடன் பதிலளிக்கும்.

அதேபோன்று, தோ்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு சாமானிய இந்தியரும் பலனடையும் வகையிலான பொருளாதாரம் நாட்டுக்குத் தேவை’ என்றாா்.

விலைவாசி உயா்வு, குறைந்த தனியாா் முதலீடு, ஊதிய தேக்கம் போன்ற பிரச்னைகள் சாமானிய மக்களைப் பாதிக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, பொருளாதாரத்தை மோசமாக கையாண்டு வருவதாக மத்திய அரசை காங்கிரஸ் தொடா்ச்சியாக விமா்சித்து வருகிறது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க