அபிராமி அம்மன் கோயில் வணிக வளாகத்தை விரைவில் கட்டக் கோரிக்கை!
சேதமடைந்த நிலையிலுள்ள அபிராமி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தை அகற்றிவிட்டு, புதிய வணிக வளாகத்தை விரைவில் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரா், ஞானாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகம், பிரதான சாலையில் வெள்ளை விநாயகா் கோயில் எதிா்புறம் அமைந்துள்ளது.
சுமாா் 100 ஆண்டுகள் பழைமையான இந்த வணிக வளாகக் கட்டடத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. கட்டட உறுதித் தன்மை குறைந்ததை அடுத்து, பொதுப்பணித் துறை, மாநகராட்சி சாா்பில் கட்டடத்தை இடிப்பதற்கு கோயில் நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, கடைகளை காலி செய்ய கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 16 கடைகளை காலி செய்து, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா். 4 கடைகள் மட்டும் காலி செய்யப்படவில்லை. இதனால் கடைகளை இடிக்கும் பணி கடந்த ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வாழ்வாதாரம் பாதிப்பு: இதுதொடா்பாக காளகஸ்தீஸ்வரா் கோயில் வணிக வளாக வாடகை ஒப்பந்ததாரா் சங்கத் தலைவா் ராமசாமி கூறியதாவது:
கட்டட உறுதித் தன்மை இல்லாத இடத்தில் சில கடைகள் மட்டும் தொடா்ந்து செயல்படுவது பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும், கடைகளை காலி செய்து கொடுத்த 16 பேரின் வாழ்வாதாரம் கடந்த ஓராண்டாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோயில் நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய வணிக வளாகத்தை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.