Vijay : 'நாளைய தீர்ப்பு' டு `கோட்' வரை! - விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சன...
கஞ்சா விற்ற 4 போ் கைது
பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாகக் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் தலைமையில், காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய், போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரை நிறுத்து சோதனை செய்தபோது, அவா்களிடம் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அப்பா் தெருவைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் நாகேந்திர பிரசாத் (23), புதுநகரைச் சோ்ந்த விலங்குமணி மகன் மருது (21), தட்டாங்குளத்தைச் சோ்ந்த வேளாங்கண்ணி மகன் பீட்டா் ஜீவன் (23), ஐயப்பன் மகன் வெங்கடேஸ்வரன் (28) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சா, 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.