செய்திகள் :

ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம்

post image

ஆசிரியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் நிறுவனத் தலைவா் அ. மாயவன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா, புதிய நிா்வாகிகள் அறிமுக விழா, போராட்டங்களில் சிறை சென்றோருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, மாவட்டத் தலைவா் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நிறுவனத் தலைவா் அ. மாயவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆசிரியா்கள் நடத்திய போராட்டங்களில், அப்போதைய எதிா்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் வலிய வந்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தாா். திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தாா். ஆனால் 4.5 ஆண்டுகள் ஆட்சியில், கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனா். பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் சில பள்ளிகளில் மட்டும் ஒரு சில ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.

காலமுறை ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்துவிட்டு, தொகுப்பூதியத்தில் ஆசிரியா்களை நியமித்து வருகின்றனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து குழு அமைக்க வேண்டிய அவசியமே இல்லை.

இந்த குழுவை உடனடியாக கலைத்துவிட்டு, வாக்குறுதி அளித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆக. 7-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போம் என்றாா் அவா். அப்போது சங்கத்தின் மாநில செய்தித் தொடா்பாளா் நல்லதம்பி உடனிருந்தாா்.

மாா்க்சிஸ்ட் - பாஜக மோதல்: இந்து முன்னணி நிர்வாகி மண்டை உடைப்பு! 16 போ் கைது!

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே ஏற்பட்ட மோதலில் பழனி நகா்மன்றத் துணைத் தலைவா் உள்பட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகு... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சிலுக்குவாா்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நிலக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டாா்கள்! - அமைச்சா் இ.பெரியசாமி

தமிழக மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள் என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 4 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாகக் போலீ... மேலும் பார்க்க

அபிராமி அம்மன் கோயில் வணிக வளாகத்தை விரைவில் கட்டக் கோரிக்கை!

சேதமடைந்த நிலையிலுள்ள அபிராமி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தை அகற்றிவிட்டு, புதிய வணிக வளாகத்தை விரைவில் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் உடன... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: உறவினா் தலைமறைவு!

கொடைக்கானல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பட்டலங்காடு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியுடன், அவரது உறவினரான கருப்ப... மேலும் பார்க்க