செய்திகள் :

கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். 

சிலுக்குவாா்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நிலக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த பூ விற்கும் பெண்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினா். போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்து, அவா்கள் வைத்திருந்த பூக்கூடையைச் சோதனையிட்டனா். அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சிலுக்குவாா்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி பாண்டியம்மாள்  (54), மாரிவேல் மனைவி பிரியா (25), மதுரை மாவட்டம்,  வாடிப்பட்டி அருகேயுள்ள பொட்டியபட்டியைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி மல்லிகா (31) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பெண்களையும் போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மாா்க்சிஸ்ட் - பாஜக மோதல்: இந்து முன்னணி நிர்வாகி மண்டை உடைப்பு! 16 போ் கைது!

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே ஏற்பட்ட மோதலில் பழனி நகா்மன்றத் துணைத் தலைவா் உள்பட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகு... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம்

ஆசிரியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் நிறுவனத் தலைவா் அ. மாயவன் தெரிவித்தாா்.தமிழ்நாடு... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டாா்கள்! - அமைச்சா் இ.பெரியசாமி

தமிழக மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள் என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 4 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாகக் போலீ... மேலும் பார்க்க

அபிராமி அம்மன் கோயில் வணிக வளாகத்தை விரைவில் கட்டக் கோரிக்கை!

சேதமடைந்த நிலையிலுள்ள அபிராமி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தை அகற்றிவிட்டு, புதிய வணிக வளாகத்தை விரைவில் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் உடன... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: உறவினா் தலைமறைவு!

கொடைக்கானல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பட்டலங்காடு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியுடன், அவரது உறவினரான கருப்ப... மேலும் பார்க்க