Vijay : 'நாளைய தீர்ப்பு' டு `கோட்' வரை! - விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சன...
கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிலுக்குவாா்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நிலக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த பூ விற்கும் பெண்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினா். போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்து, அவா்கள் வைத்திருந்த பூக்கூடையைச் சோதனையிட்டனா். அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சிலுக்குவாா்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி பாண்டியம்மாள் (54), மாரிவேல் மனைவி பிரியா (25), மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள பொட்டியபட்டியைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி மல்லிகா (31) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பெண்களையும் போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.