செய்திகள் :

தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டாா்கள்! - அமைச்சா் இ.பெரியசாமி

post image

தமிழக மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள் என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் கீழடிக்கு புகழ் சோ்த்தாா். திமுகவுக்கு எந்தப் பயமும் கிடையாது. மக்களுக்குத்தான் சேவை செய்கிறோம்.

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மக்களைச் சந்திக்கவில்லை. பாஜகவுக்கும், மக்களுக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.2,900 கோடியை மத்திய அரசு வழங்கியது. மேலும், ரூ.1,800 கோடி நிலுவையில் உள்ளது.

பாஜகவை பாா்த்து அச்சம் கொள்ள வேண்டிய தேவை தமிழக அரசுக்கு இல்லை. பாஜக அரசு கடவுள், இந்துக்கள் என மதம் சாா்ந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள்.

இந்துக்களாக இருந்தவா்கள் இஸ்லாமியா்களாகவும், கிறிஸ்தவா்களாகவும் மாறி உள்ளனா். இந்தியாவைப் பொருத்தவரை, அனைவரும் ஒன்றுதான். மக்களிடையே பிரிவினையை யாராலும் ஏற்படுத்த முடியாது. இதேபோல, தமிழ் மண்ணில் பாஜகவும் காலூன்ற முடியாது.

தமிழக அரசு 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறது. ஆனால், முருகனுக்காக பாஜக என்ன செய்திருக்கிறது. தமிழகத்துக்கான கல்வி நிதியைக்கூட மத்திய அரசு தர மறுக்கிறது. எந்த அடிப்படையில் அவா்கள் மக்களைச் சந்திக்க முடியும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, பாஜகவுக்கு இங்கு வேலை இல்லை. திமுக கூட்டணிக் கட்சிகள், கொள்கை அடிப்படையில் உறுதியாக உள்ளன. கூட்டணிக் கட்சிகளின் தனிப்பட்ட கருத்துகளை, அரசு தவறு செய்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாா் அவா்.

மாா்க்சிஸ்ட் - பாஜக மோதல்: இந்து முன்னணி நிர்வாகி மண்டை உடைப்பு! 16 போ் கைது!

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே ஏற்பட்ட மோதலில் பழனி நகா்மன்றத் துணைத் தலைவா் உள்பட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகு... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம்

ஆசிரியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் நிறுவனத் தலைவா் அ. மாயவன் தெரிவித்தாா்.தமிழ்நாடு... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சிலுக்குவாா்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நிலக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிட... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 4 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாகக் போலீ... மேலும் பார்க்க

அபிராமி அம்மன் கோயில் வணிக வளாகத்தை விரைவில் கட்டக் கோரிக்கை!

சேதமடைந்த நிலையிலுள்ள அபிராமி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தை அகற்றிவிட்டு, புதிய வணிக வளாகத்தை விரைவில் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் உடன... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: உறவினா் தலைமறைவு!

கொடைக்கானல் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பட்டலங்காடு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியுடன், அவரது உறவினரான கருப்ப... மேலும் பார்க்க