செய்திகள் :

அப்பா அம்மா மக்கள் கழகம் உள்ளிட்ட 24 தமிழகக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்; காரணம் என்ன?

post image

கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத கட்சிகளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, பின் அங்கீகரிக்கப்படாமல் 2,800க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளைப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 345 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டின் சில கட்சிகளும் அடங்கும். தமிழ் மாநில கட்சி, மீனவ மக்கள் முன்னணி, காமராஜர் மக்கள் கட்சி, அப்பா அம்மா மக்கள் கழகம் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2019க்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடாமலும், பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத கட்சிகள், அரசின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் கட்சிகளை தேர்தல் ஆணையப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய கேட்டு, அதற்கான பதிலைப் பெற்று 1 மாதத்திற்குள் பரிந்துரைக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: "பள்ளிகளிலும் போலீஸ் இருக்கணுமா?" - திரிணாமூல் எம்பி சர்ச்சை பேச்சு

நேற்று முன்தினம், கொல்கத்தா சட்டக் கல்லூரி ஒன்றில், அந்தக் கல்லூரி மாணவி ஒருவரை, அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத... மேலும் பார்க்க

CJI BR Gavai: "நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்" - தந்தை குறித்து கவாய்

ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவத... மேலும் பார்க்க

பாஜக: நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை: 'கைதான பிரதீப் உடன் தொடர்பு?' - வினோஜ் P.செல்வம் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர்களுக்குத் போதைப் பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பாஜக நிர்வாகி வினோஜ் P.செல்வத்துடன் இருக்கும் போட்டோ வைரலானது. பிரதீப்புக்கு, வினோ... மேலும் பார்க்க

BJP: "விசிகவுக்கு எத்தனை தொகுதி கொடுப்பாங்கன்னு முதல்வர்ட்ட கேப்பீங்களா?" - நயினார் நாகேந்திரன்

'நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு!'பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசி... மேலும் பார்க்க

"தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிக்க காரணம் இதான்" - ஜெய்சங்கர் சொல்லும் விளக்கம் என்ன?

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து, சிறையில் அடைப்பது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தடுக்க தொடர்ந்து கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்த நிலையில், இலங்கை ... மேலும் பார்க்க

Trump: "தாக்குதல் நிறுத்தம், வணிக ஒப்பந்தம் ட்ரம்பே அறிவிக்கிறார்; அப்போ இந்தியா?" - ப.சிதம்பரம்

நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியா, அமெரிக்கா இடையே மிகப்பெரிய வணிக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாகக் கூறியிருந்தார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிர... மேலும் பார்க்க