செய்திகள் :

அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்?

post image

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான வழக்கில் அவர் தயாரிக்கும் பட கதாநாயகர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாம்.

டான் பிக்சர்ஸ் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை, பராசக்தி, சிம்பு - 49, இதயம் முரளி உள்ளிட்ட படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். ஒவ்வொரு படமாகத் தயாரித்து லாபம் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த படத்தைத் தயாரிப்பதுதான் வழக்கமானது.

ஆனால், வரும்போதே பிரம்மாண்டமாக அடுத்தடுத்து நட்சத்திர நடிகர்களை ஒப்பந்தம் செய்து தமிழ் சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தியவர் ஆகாஷ் பாஸ்கரன்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர் முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் அதில் நடிகர் தனுஷுக்கு இட்லி கடை படத்தை இயக்கி, நடிக்க ரூ. 40 கோடியும், சிவகார்த்திகேயனுக்கு முன்பணமாக ரூ. 25 கோடியையும் சிம்புவுக்கு முன்தொகையாக ரூ. 15 கோடியும் ஆகாஷ் கொடுத்ததாக் கூறப்படுகிறது.

மேலும், சட்டவிரோத பணமாற்றம் மற்றும் முதலீடு செய்திருக்கலாம் என அமலாக்கத்துறையினர் சந்தேகப்பட்டதால் ஆகாஷ் பாஸ்கரனை விசாரிக்க சம்மன் அனுப்பினர். இன்று ஆஜராக வேண்டிய ஆகாஷ் இன்னும் ஆஜராகவில்லை. இதனால், அவர் எங்கிருக்கிறார் என்கிற விசாரணையைத் துவங்கியுள்ளனராம்.

இதற்கிடையே, நடிகர்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: ஏ. ஆர். ரஹ்மான்

டிஎன்சிஏ கோஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தில் கோஜன் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் 4 மைதானங்கள், 3 டா்ஃப் வசதிகள் உள்ளன. வலைப் பயிற்சிக்காக 10 டா்ஃப... மேலும் பார்க்க

யூரோப்பா லீக் சாம்பியன் டாட்டன்ஹாம்

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி கைப்பற்றியது. யூரோப்பா லீக் கோப்பை இறுதி ஆட்டம் ஸ்பெயினின் பில்போ நகரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிகளான டாட்டன்ஹா... மேலும் பார்க்க

ஒருநாள்: அயா்லாந்திடம் மே.இந்திய தீவுகள் படுதோல்வி

மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அயா்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 முறை உலக சாம்பியன் மே.இந்திய தீவுகள் அணிக்கும், அயா்லாந்துக்கும் இடையே 3 ஆட்ட... மேலும் பார்க்க

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: 19 போ் இந்திய அணி பயணம்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 19 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. 4-ஆவது தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டிகள் பாங்காக்கில் மே 24 முதல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. ஆசிய குத்த... மேலும் பார்க்க

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் (2024-25) ஐரோப்பிய லெக் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7 முதல் நெதா்லாந்தின் ஆம்ஸ்ட்ல்வீன், பெல்ஜியத்தின் ஆன்ட்வொ்ப் நகரங்களில் புரோ ஹாக்கி லீக் ஆட்ட... மேலும் பார்க்க

பிரெஞ்சு ஓபன்: முன்னணி நட்சத்திரங்கள் அல்கராஸ், ஸ்வியாடெக் தயாா்

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னணி நட்சத்திரங்கள் காா்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோா் தயாராகி வருகின்றனா். டென்னிஸ் விளையாட்டில் ஆஸ்திரேலிய ஓபன், பி... மேலும் பார்க்க