செய்திகள் :

கீழடி அறிக்கையைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசு: "புராணங்களை வரலாறாக மாற்றும் பாஜக" -சு.வெ எதிர்ப்பு

post image

கீழடி குறித்த ஆய்வு தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதை எதிர்த்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.

அவர் அதில் கூறியுள்ளதாவது...

"தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக.

கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்குச் சமர்பித்தார்.

ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது, “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

கீழடி
கீழடி

இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி நாடாளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையைத் திருப்பி அனுப்பியுள்ளது.

கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றிய பாஜக அரசு, அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது!

அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது.

கீழடி தமிழர்களின் தாய்மடி என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'ED ரெய்டு வந்தா, ஓடிப்போய் மோடியை சந்திக்கிறீங்க..!' - சீமான் சாடல்

‘அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள்’ என முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார். இன்று (மே 23) நடைபெற்ற செய்தியாளர்... மேலும் பார்க்க

சிவகங்கை: கிளம்பிய எதிர்ப்பு; நூல் வெளியீட்டு விழா ரத்து; திரும்பிச்சென்ற ஆளுநர் - நடந்தது என்ன?

நாட்டார்களின் எதிர்ப்பால் நூல் வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பிச் சென்ற சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிவ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா அதிபரிடம் போலியான இனப்படுகொலை வீடியோவை காட்டினாரா ட்ரம்ப்? - வெடிக்கும் சர்ச்சை

'விளக்குகளை அணையுங்கள்' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, வெள்ளை மாளிகை, ஓவல் அலுவலகத்தின் விளக்குகள் அணைகிறது. அங்கே, கிட்டத்தட்ட நான்கு நிமிட வீடியோ ஓடுகிறது. அதில் 'எங்களுக்கு யார் அனுமதியும் தேவையில்... மேலும் பார்க்க

'கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கெடுபிடி; கொள்கை மாற்றத்தில் அரசாங்கம்!' - காரணம் என்ன?

வெளிநாட்டில் படிக்க ஆசைப்படும் இந்திய மாணவர்களின் சாய்ஸ்களில் ஒன்று, 'கனடா'. ஆனால், கனடாவில் எடுக்கப்படும் கொள்கை மாற்றங்களால், 'இது இனி தொடருமா?' என்கிற சந்தேகம் எழுகிறது. ஏன்... என்ன ஆனது? மேலே கூறி... மேலும் பார்க்க

Sindoor: "கேமராக்கள் முன் மட்டும் உங்கள் இரத்தம் கொதிக்கிறதே ஏன்?" - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

ராஜஸ்தான் மாநிலத்தில் முடிவுற்ற ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று (மே 22) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செ... மேலும் பார்க்க

'புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்'- எடப்பாடி வலியுறுத்தல்

வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டி... மேலும் பார்க்க