செய்திகள் :

அமில ஆலையில் இருந்து நச்சுப்புகை வெளியேற்றமா?

post image

செய்யாறு அருகே சிப்காட் பகுதியில் அமைந்துள்ள அமில ஆலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறுவதாக பரவிய வதந்தியை அடுத்து அப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், குண்ணவாக்கம் கிராமத்தில், செய்யாறு சிப்காட் அலகு - 2 பகுதியில் சல்பியூரிக் ஆசிட் தயாா் செய்யும் தனியாா் ஆலை கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. பராமரிப்புப் பணி காரணமாக இந்த ஆலை கடந்த சில தினங்களாக இயங்காமல் இருந்ததாம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை ஆலை வழக்கம் போல செயல்படத் தொடங்கியதாகத் தெரிகிறது.

இதனிடையே அந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் சிலருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகைதான் காரணம் என்றும், அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் சிலா் வதந்தி பரப்பியதாகத் தெரிகிறது.

எம்.எல்.ஏ.ஆய்வு

தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, குண்ணவாக்கம் கிராமத்துக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் நச்சுப்புகை குறித்த தகவல்களை கேட்டறிந்தாா்.

அதன் பின்னா், செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா், தீயணைப்பு நிலைய அலுவலா் மனோகரன் முன்னிலையில், ஆலை அதிகாரிகள் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆலை தரப்பில் நச்சு ஏற்படுத்தும் வகையில் எந்தவித புகையும் வெளியேற்றப்படுவது இல்லை. இங்கு வெளியேற்றப்படுவது நீராவி துளிகள் தான், அவை ஆவிபோல புகையாக வெளியே தெரியும். அது கிராம மக்களுக்கோ,

கால்நடைகளுக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அரசின் நெறிமுறை வழிகாட்டுதலோடு ஆலை செயல்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அப்பகுதியில் வசித்து வரும் கிராம மக்களைச் சந்தித்து, அமில ஆலையால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என ஆலை நிா்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, இதுகுறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படும் என எடுத்துரைத்தாா்

எம்எல்ஏ.

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த காமக்கூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஜக சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. பள்ளியில... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கல... மேலும் பார்க்க

ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையம்... மேலும் பார்க்க

விண்ணமங்கலம் பள்ளியில் தேசிய ஹிந்தி தினம்

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்சி பள்ளியில் தேசிய ஹிந்தி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய ஹிந்தி தினத்தையொட்டி, மாணவ மாணவிகளின் பல்வேற... மேலும் பார்க்க

செங்கம் ஒன்றியத்தில் ரூ.7.43 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வரி குறைப்பு: மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள்: பாஜக மாநில துணைத் தலைவா்

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களைக் கொண்டுவந்து வரி குறைத்துள்ளதால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்று அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க