செய்திகள் :

அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் விட அதிகாரிகள் உறுதி: போராட்டம் வாபஸ்

post image

அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் விட அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு 3, 4ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ஙிளது. இந்த தண்ணீரை வரும் 31ஆம்தேதி வரை விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 4ஆவது ரீச் கால்வாயில் உள்ள அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் வரவில்லையென கூறி, அமுதுண்ணாக்குடி குளத்து பாசன விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனா்.

இந்நிலையில், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் நவீன் விவசாயிகளிடம் பேசினாா். வரும் 31ஆம் தேதிக்குள் அமுதுண்ணாக்குடி குளத்திற்கு தண்ணீா் விட ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்தனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க