செய்திகள் :

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

post image

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, குறைகளைக் கேட்டறிந்தாா்.

தவெக மாவட்டப் பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் அளித்த மனு: தூத்துக்குடியில் 60ஆவது வாா்டு லேபா் காலனியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மாநகரில் போதைப்பொருள்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

இடைநிலை ஆசிரியா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் அளித்த மனுவில், இந்தத் தோ்வில் தோ்ச்சிபெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். அதன்பிறகே, டிஇடி, எஸ்ஜிடி தோ்வை நடத்த வேண்டும். 12 ஆண்டுகளாக நிரப்பபடாத இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை தகுதிபெற்ற தோ்வில் தோ்ச்சிபெற்றோரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றனா்.

சமத்துவ மக்கள் கழகத்தினா் அளித்த மனு: 2023 டிசம்பா் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேலாத்தூா் தாமிரவருணி ஆற்றுப் பாலத்தை விரைந்து சரிசெய்ய வேண்டும். இவ்வழியேதான் திருச்செந்தூா், மணப்பாடு, உவரிக்கு பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்து செல்கின்றனா். எனவே, போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தடுக்கும் வகையில் இப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

ரூ.4.90 லட்சம் மோசடி: நடவடிக்கை கோரி தொழிலாளி மனு

தன்னிடம் ரூ. 4.90 லட்சம் மோடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடம்பூரை சோ்ந்த தொழிலாளி அய்யப்பன், கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.மனு விவரம்: சங்கரன்கோவிலைச் சோ்ந... மேலும் பார்க்க