செய்திகள் :

அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள கெஞ்சும் உலக நாடுகள்: டிரம்ப் பேச்சு

post image

அமெரிக்க அதிபராகி, உலக பொருளாதாரத்தையே வீழ்ச்சியடைய செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவரும் டொனால்ட் டிரம்ப், வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள உலக நாடுகள் தன்னிடம் கெஞ்சுவதாக மிகத்தரம் தாழ்ந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக என்னை தொலைபேசியில் அழைக்கும் உலக நாட்டுத் தலைவர்கள் பலரும், ஒப்பந்தத்துக்காக உயிரை விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர், எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், தயவு செய்து, தயவு செய்து சார் எங்களுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறோம் என்ன வேண்டுமானாலும் என்று கூறுகிறார்கள்.

இந்த பேச்சின்போது அவர் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், கடந்த வாரம் வியட்நாம் பொதுச் செயலர், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்வதற்காக தங்களது வரியை பூஜ்ஜியம் அளவுக்குக் கூட குறைத்துக் கொள்கிறோம் என்று அனுப்பிய தகவலை வெளியிட்டிருந்தார்.

மேலும், தென்கொரியாவின் பொறுப்பில் உள்ள அதிபர், தன்னைத் தொடர்பு கொண்டு வணிக ஒப்பந்தங்கள் குறித்து பேசியதாக கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார் டொனால்ட் டிரம்ப்.

ஆனால், இந்த அழைப்புகளை உறுதி செய்யும் வகையில் வெள்ளை மாளிகை எந்த அழைப்புப் பதிவுகளையும் வெளியிடவில்லை.

மேலும் டிரம்ப் பேசுகையில், எந்த மோசமான விஷயத்தை நான் செய்துகொண்டிருக்கிறேன் என்பது எனக்கத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்ற எனக்குத் தெரியும். நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும். அதனால்தான் நீங்கள் எனக்கு வாக்களித்தீர்கள் என்று கூறி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க