செய்திகள் :

'அமெரிக்கா, சீனாவை முந்திய இந்தியா' - 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி இரட்டிப்பு!

post image

'அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட, இந்தியாவின் வளர்ச்சி வேகமாக உள்ளது' என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.

2015-ல்...2025-ல்...

சர்வதேச நிதியத்தின் அறிக்கைப்படி, "2015-ம் ஆண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 2.1 டிரில்லியன் டாலராக இருந்தது. தற்போது இதன் மதிப்பு 4.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 105 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, சீனாவை தாண்டிய இந்தியாவின் சாதனை!
அமெரிக்கா, சீனாவை தாண்டிய இந்தியாவின் சாதனை!

அமெரிக்காவும், சீனாவும்!

2015 - 2025-ம் ஆண்டிற்குள்ளான, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 66 சதவிகிதமாகவும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 44 சதவிகிதமாகவும் தான் இருந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவை விட, இந்தியாவின் வளர்ச்சி வேகமாக உள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தின் போது...

21-ம் ஆண்டு வரை, அதாவது கொரோனா பேரிடர் காலம் வரையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 டிரில்லியன் டாலராகத் தான் இருந்தது. ஆனால், அதன் பின்னர் வேகமெடுத்து 4 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.

2015 டு 2025 காலக்கட்டத்தில், இது இரட்டிப்பு வளர்ச்சி ஆகும்.

இந்தியா மட்டுமல்ல...

இந்தியா மட்டுமல்ல, இந்தக் காலக்கட்டத்தில் மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.

EPFO 3.0: "வருங்கால வைப்புநிதி பணத்தை இனி ATMலேயே எடுக்கலாம்" - மத்திய அமைச்சர் சொல்வதென்ன?

தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியை (EPFO) ஏடிஎம்-களில் எடுக்கும் அம்சம் அமல்படுத்தவிருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்திருக்கிறார்.தெலுங்கானா மண்டல அலுவலகத்தின் EP... மேலும் பார்க்க