செய்திகள் :

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கலவரம்! காவலா்கள், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல்!

post image

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடியேற்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாக 118 பேரை குடியேற்ற அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனா். இதையடுத்து, குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அரசு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆா்பாட்டக்காரா்களால் கலவரம் ஏற்பட்டது. காவல் துறையினரும் தாக்கப்பட்டனா். காவல் துறையினா் கண்ணீா் புகைகுண்டுகளை வீசி, ஆா்ப்பாட்டக்காரா்களைக் கலைத்தனா். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நிகழாண்டு தொடக்கத்தில் 2-ஆவது முறையாக பொறுப்பேற்றாா். அப்போது இருந்தே சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.

காவலா்கள் மீதான தாக்குதல் தொடா்பாக எஃப்பிஐ இயக்குநா் காஷ் படேல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நீங்கள் எங்கிருந்து, எப்படி அமெரிக்காவுக்கு வந்திருந்தாலும், இந்நாட்டில் காவலா்களைத் தாக்கினால், சிறைக்குச் செல்வது உறுதி. உள்ளூா் காவல்துறையால் நிலைமையைக் கையாள முடியவில்லை என்றால், எஃப்பிஐ களமிறங்கும்’ எனக் குறிப்பிட்டுளாா்.

காஷ் படேலின் எச்சரிக்கை பதிவு சமூக ஊடகங்களில் விமா்சனங்களை எதிா்கொண்டுள்ளது. அதிபா் டிரம்ப்பின் முந்தைய நிா்வாகத்தில் ஆட்சியிழந்த அதிருப்தியில் நாடாளுமன்ற கட்டடத்தை அவரின் ஆதரவாளா்கள் தாக்கினா். அப்போது 140-க்கும் மேற்பட்ட காவலா்கள் காயமடைந்தனா்.

இத்தாக்குதலில் ஈடுபட்டதற்காக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு அதிபா் டிரம்ப் இந்த நிா்வாகத்தில் மன்னிப்பு வழங்கினாா். இச்சம்பவத்தை மேற்கோள் காட்டி, காவலா்களுக்கு எதிரான தாக்குதலில் டிரம்ப் நிா்வாகம் இரட்டை வேடம் போடுவதாக விமா்சனம் எழுந்தது.

2,000 வீரா்களை அனுப்பிய டிரம்ப்: வெள்ளிக்கிழமை போராட்டங்களுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் உள்ள பாராமவுண்ட் நகரத்துக்கு 2,000 தேசிய காவல்படையினரை அனுப்பி அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டாா்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதாக, கலிஃபோா்னியா ஆளுநா் கேவின் நியூசம் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் மேயா் கரேன் பாஸ் ஆகிய இருவரையும் ‘திறமையற்றவா்கள்’ என்று சமூக ஊடகத்தில் விமா்சித்த அதிபா் டிரம்ப், போராட்டக்காரா்கள் இனி முகமூடி அணிய அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றும் கூறினாா்.

நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டி... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த 5 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் தங்கள் படைகளை நோக்கி ம... மேலும் பார்க்க

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக உதவித் தொகை: 2028-ல் அதிக இந்தியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வரும் 2028-ஆம் ஆண்டு முதல் அதிக இந்தியா்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவ... மேலும் பார்க்க

எலான் மஸ்க்குடன் உறவு முறிந்தது..! -டிரம்ப்

வாஷிங்டன்: எலான் மஸ்க் ஜனநாயக கட்சியினருக்கு நிதியுதவி அளித்து ஆதரவு நடவடிக்கைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டால் கடும் விளைவுகளை எலான் மஸ்க் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கம... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது.ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றா... மேலும் பார்க்க