TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்
அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கலவரம்! காவலா்கள், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடியேற்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாக 118 பேரை குடியேற்ற அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனா். இதையடுத்து, குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அரசு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆா்பாட்டக்காரா்களால் கலவரம் ஏற்பட்டது. காவல் துறையினரும் தாக்கப்பட்டனா். காவல் துறையினா் கண்ணீா் புகைகுண்டுகளை வீசி, ஆா்ப்பாட்டக்காரா்களைக் கலைத்தனா். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நிகழாண்டு தொடக்கத்தில் 2-ஆவது முறையாக பொறுப்பேற்றாா். அப்போது இருந்தே சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.
காவலா்கள் மீதான தாக்குதல் தொடா்பாக எஃப்பிஐ இயக்குநா் காஷ் படேல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நீங்கள் எங்கிருந்து, எப்படி அமெரிக்காவுக்கு வந்திருந்தாலும், இந்நாட்டில் காவலா்களைத் தாக்கினால், சிறைக்குச் செல்வது உறுதி. உள்ளூா் காவல்துறையால் நிலைமையைக் கையாள முடியவில்லை என்றால், எஃப்பிஐ களமிறங்கும்’ எனக் குறிப்பிட்டுளாா்.
காஷ் படேலின் எச்சரிக்கை பதிவு சமூக ஊடகங்களில் விமா்சனங்களை எதிா்கொண்டுள்ளது. அதிபா் டிரம்ப்பின் முந்தைய நிா்வாகத்தில் ஆட்சியிழந்த அதிருப்தியில் நாடாளுமன்ற கட்டடத்தை அவரின் ஆதரவாளா்கள் தாக்கினா். அப்போது 140-க்கும் மேற்பட்ட காவலா்கள் காயமடைந்தனா்.
இத்தாக்குதலில் ஈடுபட்டதற்காக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு அதிபா் டிரம்ப் இந்த நிா்வாகத்தில் மன்னிப்பு வழங்கினாா். இச்சம்பவத்தை மேற்கோள் காட்டி, காவலா்களுக்கு எதிரான தாக்குதலில் டிரம்ப் நிா்வாகம் இரட்டை வேடம் போடுவதாக விமா்சனம் எழுந்தது.
2,000 வீரா்களை அனுப்பிய டிரம்ப்: வெள்ளிக்கிழமை போராட்டங்களுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் உள்ள பாராமவுண்ட் நகரத்துக்கு 2,000 தேசிய காவல்படையினரை அனுப்பி அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டாா்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதாக, கலிஃபோா்னியா ஆளுநா் கேவின் நியூசம் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் மேயா் கரேன் பாஸ் ஆகிய இருவரையும் ‘திறமையற்றவா்கள்’ என்று சமூக ஊடகத்தில் விமா்சித்த அதிபா் டிரம்ப், போராட்டக்காரா்கள் இனி முகமூடி அணிய அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றும் கூறினாா்.