செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

post image

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த 5 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆனால் தங்கள் படைகளை நோக்கி முன்னேறி வந்த சிலரை எச்சரிக்கும் வகையில் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஃபா நகரில் அமெரிக்க ஆதரவுடன் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையம் செயல்பட்டு வருகிறது. காஸாவுக்கு உணவுப்பொருள்கள் செல்வதற்கு இஸ்ரேல் முழு தடை விதித்துள்ள நிலையில், இந்த உணவு மையத்தை நோக்கி நாள்தோறும் பாலஸ்தீன மக்கள் படையெடுத்து வருகின்றனா். இந்நிலையில், அந்த மையத்தை நோக்கிச் சென்ற 5 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்ாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த மையத்துக்கு அருகே சென்ற பாலஸ்தீனா்களில் சிலரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் 27 போ் உயிரிழந்தனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜிஹெச்எஃப் செயல்பட்டு வரும் பகுதியில் 80 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் மீதுதான் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘கிரேட்டா தன்பா்குக்கு அனுமதியில்லை’

நிவாரணப் பொருள்களை ஏற்றி வரும் கப்பலை காஸாவுக்குள் அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தாா்.

இந்தக் கப்பலில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் சமூக ஆா்வலா் கிரேட்டா தன்பா்க் உள்ளிட்டோா் காஸாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

பாலஸ்தீன பிராந்தியத்துக்குள் ஹமாஸ் கடல்வழியாக ஆயுதங்கள் இறக்குமதி செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் காட்ஸஸ் கூறினாா்.

நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டி... மேலும் பார்க்க

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கலவரம்! காவலா்கள், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடியேற்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாக 118 பேரை குடியேற்ற அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனா். இதையடுத்து, குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் க... மேலும் பார்க்க

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக உதவித் தொகை: 2028-ல் அதிக இந்தியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வரும் 2028-ஆம் ஆண்டு முதல் அதிக இந்தியா்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவ... மேலும் பார்க்க

எலான் மஸ்க்குடன் உறவு முறிந்தது..! -டிரம்ப்

வாஷிங்டன்: எலான் மஸ்க் ஜனநாயக கட்சியினருக்கு நிதியுதவி அளித்து ஆதரவு நடவடிக்கைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டால் கடும் விளைவுகளை எலான் மஸ்க் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கம... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது.ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றா... மேலும் பார்க்க