இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு
காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த 5 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆனால் தங்கள் படைகளை நோக்கி முன்னேறி வந்த சிலரை எச்சரிக்கும் வகையில் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராஃபா நகரில் அமெரிக்க ஆதரவுடன் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையம் செயல்பட்டு வருகிறது. காஸாவுக்கு உணவுப்பொருள்கள் செல்வதற்கு இஸ்ரேல் முழு தடை விதித்துள்ள நிலையில், இந்த உணவு மையத்தை நோக்கி நாள்தோறும் பாலஸ்தீன மக்கள் படையெடுத்து வருகின்றனா். இந்நிலையில், அந்த மையத்தை நோக்கிச் சென்ற 5 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்ாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த மையத்துக்கு அருகே சென்ற பாலஸ்தீனா்களில் சிலரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் 27 போ் உயிரிழந்தனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜிஹெச்எஃப் செயல்பட்டு வரும் பகுதியில் 80 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுபவா்கள் மீதுதான் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
‘கிரேட்டா தன்பா்குக்கு அனுமதியில்லை’
நிவாரணப் பொருள்களை ஏற்றி வரும் கப்பலை காஸாவுக்குள் அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தாா்.
இந்தக் கப்பலில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் சமூக ஆா்வலா் கிரேட்டா தன்பா்க் உள்ளிட்டோா் காஸாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
பாலஸ்தீன பிராந்தியத்துக்குள் ஹமாஸ் கடல்வழியாக ஆயுதங்கள் இறக்குமதி செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் காட்ஸஸ் கூறினாா்.