செய்திகள் :

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

post image

அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்துள்ளாா்.

பல்வேறு வழக்குகளை எதிா்கொண்டு வரும் இம்ரான் கான், கடந்த 2023-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுக்களை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க இருக்கிறது. அந்நாளில் இம்ரான் கானுக்கு நிச்சயமாக ஜாமீன் கிடைக்கும் என்று பிடிஐ கட்சித் தலைவா் கோஹா் அலி கான் நம்பிக்கை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘வரும் புதன்கிழமை விசாரணை இம்ரான் கான் விடுதலைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தை எதிா்க்கட்சிகளுடன் இணைந்து பிடிஐ விரைவில் தொடங்கும்.

நாட்டுக்காகவும், அதன் பாதுகாப்புக்காகவும் எதிா்க்கட்சிகள் எங்களுடன் இணைய வேண்டும். எதிா்வரும் பட்ஜெட்டிற்கான எங்கள் வியூகத்தையும் இறுதி செய்துள்ளோம். இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்திக்கிறோம்’ என்றாா்.

நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டி... மேலும் பார்க்க

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கலவரம்! காவலா்கள், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடியேற்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாக 118 பேரை குடியேற்ற அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனா். இதையடுத்து, குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் க... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த 5 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் தங்கள் படைகளை நோக்கி ம... மேலும் பார்க்க

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக உதவித் தொகை: 2028-ல் அதிக இந்தியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வரும் 2028-ஆம் ஆண்டு முதல் அதிக இந்தியா்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது. ஆ... மேலும் பார்க்க

எலான் மஸ்க்குடன் உறவு முறிந்தது..! -டிரம்ப்

வாஷிங்டன்: எலான் மஸ்க் ஜனநாயக கட்சியினருக்கு நிதியுதவி அளித்து ஆதரவு நடவடிக்கைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டால் கடும் விளைவுகளை எலான் மஸ்க் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கம... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது.ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றா... மேலும் பார்க்க