செய்திகள் :

அமெரிக்க உளவுத் தகவல்களை உக்ரைனுக்கு பகிர பிரிட்டனுக்கு தடை!

post image

அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.

உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு கைமாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வெலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்தவாரம் வெள்ளை மாளிகை சென்றிருந்தார்.

அப்போது அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெற்ற விவாதம் வாக்குவாதமாக மாறிய நிலையில், ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் அங்கிருந்து ஸெலென்ஸ்கி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதையும் படிக்க : இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?

இந்த நிலையில், உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான ராணுவ உதவிகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக திங்கள்கிழமை அறிவித்தார்.

ஆயுதங்கள் மட்டுமின்றி வான்வழித் தாக்குதல்களைக் கண்காணித்து எச்சரிப்பது, உளவுத் தகவல் தருவது ஆகியவற்றையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனின் உளவுத்துறையுடன் அமெரிக்க உளவுத்துறை பகிரும் தகவல்களை உக்ரைனுடன் பகிரவும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து மூன்று ஆண்டுகளாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பெறும் ரஷியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவும் ‘உக்ரைனுக்கு வெளியிடக்கூடியவை’ என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில தகவல்களை பிரிட்டனுடன் பகிர்ந்து வந்தது. தற்போது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உளவுச் செய்திகளை உக்ரைனுக்கு பகிர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கை போரில் அந்நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரைப் பயன்படுத்தும் ’ஆளுநர் ட்ரூடோ’: டிரம்ப்

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் அமைதி திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம் : காஸாவில் போா் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள செயல்திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்துள்ளன.இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்ட... மேலும் பார்க்க

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சா் பங்கேற்க வாய்ப்பு

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்ள உள்ளாா். ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது. இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாத... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; ச... மேலும் பார்க்க

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை -வங்கதேசம்

டாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். வங்கதேசத்தில்... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவோம் -ரஷியா

மாஸ்கோ : அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவாா்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க