செய்திகள் :

அமைச்சர்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு மறுப்பு: அதிமுக அமளி, வெளிநடப்பு!

post image

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி அளிக்கப்படாததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அமலாக்கத்துறை சோதனைக்குள்ளான அமைச்சர் கே.என்.நேரு, டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பெண்களுக்கு எதிராக பேசிய அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக உறுப்பினர்கள் அளித்தனர்.

ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தீர்மானத்தை நிராகரித்ததால், அவரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

மேலும், தமிழக அரசுக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

இதனிடையே, அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் சட்டப்பேரவையிலேயே இருக்கிறார்.

இதையும் படிக்க : தமிழில் மட்டுமே அரசாணை: தமிழக அரசு உத்தரவு

பஹல்காம் தாக்குதல்: நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநகர பேருந்து சேவை தொடக்கம்!

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஆதம்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நுற்றாண்டு பேருந்து முனையம், தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் மற்றும் அனகாபுத்தூரிலிருந்து பிராட்வேக்கு பேர... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் வேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்னிந்... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி வழக்கு: இருவரைக் காவலில் வைக்க உத்தவு

செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்... மேலும் பார்க்க

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மாற்றம்!

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக இருந்த டாக்டர் கே சாந்தாராம், சென்னை மருத்துவக் ... மேலும் பார்க்க