அமைதிப் பேச்சுவாா்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு
கின்ஷாசா: ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவிருப்பதற்காக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவி எம்23 கிளா்ச்சிப் படையினா் ஏராளமான பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறியுள்ளனா். காங்கோவின் மிகப் பெரிய நகரான கோமா உள்ளிட்ட பல பகுதிகள் தற்போது எம்23 படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்தச் சூழலில், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தென்-மேற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் தலைநகா் லுவாண்டாவில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. கிளா்ச்சிப் படையுடன் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்துவதில்லை என்ற தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ள காங்கோ அரசு, இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறிவந்தது. எனினும், லுவாண்டா பேச்சுவாா்த்தையில் தாங்கள் பங்கேற்கப்போவதாக காங்கோ அரசு தற்போது அறிவித்துள்ளது.
தாது வளம் நிறைந்த காங்கோவின் நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சொந்த சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.
ருவாண்டாவின் உதவியுடன் செயல்படும் அந்த அமைப்புக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நடைபெறும் மோதலில் 7,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.