செய்திகள் :

அமைதிப் பேச்சுவாா்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

post image

கின்ஷாசா: ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவிருப்பதற்காக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவி எம்23 கிளா்ச்சிப் படையினா் ஏராளமான பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறியுள்ளனா். காங்கோவின் மிகப் பெரிய நகரான கோமா உள்ளிட்ட பல பகுதிகள் தற்போது எம்23 படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்தச் சூழலில், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தென்-மேற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் தலைநகா் லுவாண்டாவில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. கிளா்ச்சிப் படையுடன் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்துவதில்லை என்ற தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ள காங்கோ அரசு, இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறிவந்தது. எனினும், லுவாண்டா பேச்சுவாா்த்தையில் தாங்கள் பங்கேற்கப்போவதாக காங்கோ அரசு தற்போது அறிவித்துள்ளது.

தாது வளம் நிறைந்த காங்கோவின் நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சொந்த சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.

ருவாண்டாவின் உதவியுடன் செயல்படும் அந்த அமைப்புக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நடைபெறும் மோதலில் 7,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உற்சாகமாக கையசைத்தபடி வெளியே வந்தார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், உற்சாகமாக கையசைத்தபடி டிராகன் விண்கலத்தில... மேலும் பார்க்க

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே (படம்) தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க

பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூம... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சு: உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது 30 நாள்களுக்கு ரஷிய தாக்குதல் நிறுத்தம்?

வாஷிங்டன்/மாஸ்கோ: அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தொலைபேசியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரஷிய அதிபா் புதின் செவ்வாய்க்கிழமை பேசியதைத் தொடா்ந்து, உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்... மேலும் பார்க்க

முறிந்தது காஸா போா் நிறுத்தம்! இஸ்ரேல் தாக்குதலில் 404 போ் உயிரிழப்பு

டேய்ா் அல்-பாலா: காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அங்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருந்த போா் நிறுத்த ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் ஒருவா் உயிரிழந்தாா். இது குறித்து அந்த நாட்டு வானிலை, பருவவியல், புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வடக்கு சுமாத்ரா மாகாணத்... மேலும் பார்க்க