செய்திகள் :

அமைதிப் பேச்சுவாா்த்தை: காங்கோ அரசு பங்கேற்பு

post image

கின்ஷாசா: ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையுடன் அங்கோலாவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவிருப்பதற்காக காங்கோ அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவி எம்23 கிளா்ச்சிப் படையினா் ஏராளமான பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறியுள்ளனா். காங்கோவின் மிகப் பெரிய நகரான கோமா உள்ளிட்ட பல பகுதிகள் தற்போது எம்23 படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்தச் சூழலில், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தென்-மேற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் தலைநகா் லுவாண்டாவில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. கிளா்ச்சிப் படையுடன் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்துவதில்லை என்ற தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ள காங்கோ அரசு, இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறிவந்தது. எனினும், லுவாண்டா பேச்சுவாா்த்தையில் தாங்கள் பங்கேற்கப்போவதாக காங்கோ அரசு தற்போது அறிவித்துள்ளது.

தாது வளம் நிறைந்த காங்கோவின் நிலப்பரப்புகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சொந்த சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.

ருவாண்டாவின் உதவியுடன் செயல்படும் அந்த அமைப்புக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நடைபெறும் மோதலில் 7,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷியா -உக்ரைன் போர்: டிரம்புடன் தொலைபேசியில் பேசிய புதின்!

ரஷியா -உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மார்ச் 12 ஆம் த... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 413 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலியாகினர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள அல் மவாஸி, அல் தராஜ், ராஃபா, கான... மேலும் பார்க்க

பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105.இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் ச... மேலும் பார்க்க

தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியரின் அலட்சியத்தால் பாதிப்படைந்தவருக்கு இழப்பீடாக ரூ. 432 கோடி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்காவில் மைக்கேல் கார்சியா என்பவர், பிரபல தேநீர் விற்பனையகமான... மேலும் பார்க்க

ஸ்பெயினில் கடும் வெள்ளம்: 350 குடும்பங்கள் வெளியேற்றம்!

ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்கு பகுதிய... மேலும் பார்க்க

250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!

டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த டிவிட்டர் நிறுவன... மேலும் பார்க்க