செய்திகள் :

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

post image

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களில் மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்தில் படித்தார். இந்த நிலையில், ஐசிடி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு அம்பானியை பேராசிரியர் எம்.எம். ஷர்மா அழைப்பு விடுத்திருந்தார்.

ஷர்மாவின் சுயசரிதையான தெய்வீக விஞ்ஞானி (Divine Scientist) என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்பானி, எனது தந்தை திருபாய் அம்பானியைப் போலவே, இந்திய தொழில்துறையை உலகளாவிய தலைமைக்கு கொண்டுசெல்ல ஷர்மாவும் விரும்பினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தனியார் தொழில்முனைவோருடன் இணைந்து, செழிப்பின் வெள்ளக் கதவுகளைத் திறக்கும் என்று இருவரும் நம்பினர்.

இந்திய ரசாயனத் தொழில்துறையின் எழுச்சிக்கு ஷர்மாவின் முயற்சிகளே காரணம். அவர் ஒரு ராஷ்டிர குரு என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக ரூ. 151 கோடி அளிப்பதாகவும் அறிவித்தார்.

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி ... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறாா். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120 கோடியாக உயா்வு!

இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: 2025 ஏப்ரல... மேலும் பார்க்க

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா். பிரதமருக்கான பொருளாத... மேலும் பார்க்க

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா். தில்லியில் சனிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்ட... மேலும் பார்க்க